அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முக்கோணத் தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை 19 வயதிற்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடன் இணைந்து நடத்தப்படும் இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை அணி ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி மொத்தம் 6 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் இரண்டு 50 ஓவர் ஒருநாள் போட்டிகளும், நான்கு இருபதுக்கு-20 (T20) போட்டிகளும் இடம்பெறவுள்ளன. போட்டி அட்டவணையின்படி, ஏப்ரல் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் முறையே இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான 50 ஓவர் போட்டிகள் பிறிஸ்பேனில் உள்ள இயன் ஹீலி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
- வருட இறுதியில் இந்தியா செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி
- பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
அதனைத் தொடர்ந்து, T20 போட்டிகள் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கோல்ட் கோஸ்டிலும், ஏப்ரல் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மீண்டும் பிறிஸ்பேனிலும் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் இலங்கை நேரப்படி காலை வேளையில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவுஸ்;திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து T20 போட்டிகளிலும், ஒற்றை ஒருநாள் போட்டியிலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















