இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ரிஷப் பண்ட்

South Africa tour of India 2025

167
Rishab Pant

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாத்தில் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட் இணைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு மென்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ரிஷப் பண்ட் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார்.

>>ஆஷஸ் முதல் டெஸ்ட் குழாத்தில் மார்னஸ் லபுச்சேன்<<

அதனை தொடர்ந்து அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர், தென்னாபிரிக்க A அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 90 ஓட்டங்களை பெற்று உடற்தகுதியை நிரூபித்திருந்தார். எனவே ஜெகதீஸனுக்கு பதிலாக டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

இவருடன்  உபாதைக்கு முகங்கொடுத்திருந்த ஆகாஸ் தீப் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் T20 தொடரில் விளையாடிவரும் அணித்தலைவர் சுப்மான் கில், ஜஸ்ப்ரிட் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்ஸர் பட்டேல் மற்றும் வொசிங்டன் சுந்தர் ஆகியோர் எதிர்வரும் 8ஆம் திகதி அணியுடன் இணைந்துக்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய T20 குழாத்திலிருந்து விடுவிக்கப்பட்ட குல்தீப் யாதவ், டெஸ்ட் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய குழாம்

 

சுப்மான் கில் (தலைவர்), ரிஷப் பண்ட், யசஷ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராஹுல், சாய் சுதர்ஸன், தேவ்துத் படிக்கல், துரூவ் ஜூரல், ரவீந்ர ஜடேஜா, வொசிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ரா, அக்ஸர் பட்டேல், நிதிஷ் குமார் ரெட்டி, மொஹமட் சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஸ் தீப்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<