ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் ராஜகுமாரனுக்கு வெண்கலப் பதக்கம்

230

சீனாவின் ஹேர்பின் நகரில் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மலையக வீரரான மாதவன் ராஜகுமார் வெண்லகப் பதக்கத்தை வெற்றி கொண்டார். 

சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை 53ஆவது ஆசிய ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டித் நடைபெற்றது

ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றும் மலையக வீரர் ராஜகுமாரன்

இலங்கையின் விளையாட்டுத்துறையைப் பொறுத்தமட்டில் ……….

இம்முறை போட்டிகளில் இலங்கை சார்பாக ஐந்து வீரர்கள் பங்கேற்றிருந்ததுடன், போட்டிகளின் மூன்றாவது நாளான நேற்று (28) நடைபெற்ற ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப்பிரிவில் மாதவன் ராஜகுமாரன் பங்குபற்றியிருந்தார்

ஆசியாவைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்குகொண்ட இப் போட்டியில் பலத்த போட்டிக்கு மத்தியில் ராஜகுமாரன் மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்

இறுதிப் போட்டியில் 30இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், பலத்த போட்டியைக் கொடுத்து அவர் இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டமை பாராட்டுக்குரிய விடயமாகும்

தனது 15ஆவது வயதில் இருந்து உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றி வருகின்ற ராஜகுமாரன், கடந்த வருடம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் பங்குகொண்டு தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, தன்மீது நம்பிக்கை வைத்து, வார்த்தையாலும், பணத்தாலும் உதவிய செய்த அனைவரையும் போட்டியில் வெற்றியீட்டிய பிறகு ஞாபகப்படுத்திய ராஜகுமாரன், அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்

எனவே, போட்டியின் பிறகு தனது வெற்றி குறித்து ராஜகுமாரன் கருத்து வெளியிடுகையில்,  

“இவ்வருட இறுதியில் டுபாயில் நடைபெறவுள்ள உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன்.

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவுக்கான திகதி அறிவிப்பு

கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின்…….

அதேபோல, என்னுடைய இலக்கு மிஸ்டர் ஒலிம்பியாட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுவதாகும். அந்த இலக்கையும் என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கு பணம் தான் தேவை. எனவே, இந்த விளையாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எனக்கு அனுசரணையாளர்கள் கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன். எனது பெற்றோரின் தொழில் மற்றும் வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விளையாட்டு. ஆனாலும், மலையகத்தில் பிறந்த ஒரு தமிழனாக நிச்சயம் சாதித்து காட்டுவேன்” என அவர் குறிப்பிட்டார்

நுவரெலியா மாவட்டம், லபுக்கலைத் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜகுமாரன், ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாக பல்வேறு ஷ்டங்களுக்கு மத்தியில் கல்வியை முன்னெடுத்து இன்று இலங்கைக்கு ஆசிய மட்டத்தில் வெற்றியொன்றைப் பெற்றுக் கொடுத்து சாதனை ஏட்டில் இடம்பிடித்துவிட்டார்

எதிர்காலத்திலும், இலங்கைக்கு இன்னும் இன்னும் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com வாயிலாக மாதவன் ராஜகுமாரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<