அதிர்ச்சி அறிவிப்புடன் சர்வதேச போட்டிகளில் பூரன் ஓய்வு

7
NICHOLAS POORAN

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் நிகோலஸ் பூரன் ஓய்வினை அறிவித்துள்ளார். 

>>இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் RIDE ஆற்றல் பானம்<<

29 வயது மாத்திரம் நிரம்பிய நிகோலஸ் பூரன், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக T20i போட்டிகளில் விளையாடியிருப்பதோடு, அவ்வணிக்காக T20i போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகவும் உள்ளார். 

விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலேயே நிகோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

தனது ஓய்வு அறிவிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள பூரன், தான் மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவம் செய்ததனையும், அதனை தலைவராக வழிநடாத்திதனையும் கெளரவமாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். 

T20 லீக் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு வீரர்கள் ஓய்வு வழங்கி வரும் நிலையிலையே பூரனின் ஓய்வு அறிவிப்பும் வெளியாகியிருக்கின்றது. பூரன் போன்று தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட நட்சத்திரம் ஹெய்ன்ரிச் கிளாஸன் சர்வதேச போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

மேற்கிந்திய தீவுகளை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் அணித்தலைவராக வழிநடாத்திய அனுபவம் கொண்டுள்ள நிகோலஸ் பூரன், அவ்வணிக்காக 4500 ஓட்டங்களுக்கு மேல் மூவகை போட்டிகளிலும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<