நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஒல்லி ரொபின்சனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
>>சுப்பர் ஓவர் திரில்லர்; இந்தியாவை வீழ்த்திய இலங்கை A அணி<<
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஒல்லி ரொபின்சனுக்கு அவரது வலது முழங்காலில் ஏற்பட்டிருக்கும் சிறு உபாதை ஆபத்து ஒன்றின் காரணமாகவே நியூசிலாந்து அணியுடன் ஓவல் அரங்கில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குள் மீண்டும் போராடி இடம்பிடித்த 32 வயதான ரொபின்சனுக்கு, இந்த உபாதை ஆபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமான நேரத்தில் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உடனடியாக 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி ஒல்லி ரொபின்சன் அசத்தியிருந்ததோடு, அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒல்லி ரொபின்சன் தொடர்ந்து அணியுடனேயே இருப்பார் என்றும், ஜூன் 25 டிரெண்ட் பிரிட்ஜ் இல் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் மீண்டும் விளையாடுவதை இலக்காகக் கொண்டுள்ளார் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒல்லி ரொபின்சனுக்குப் பதிலாக இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் அறிமுகவீரர் பந்துவீச்சாளர் சொன்னி பேக்கர் ஆகியோரது சேவைகளை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















