CPL தொடரில் ஆடும் வாய்ப்பினைப் பெற்ற நிரோஷன் டிக்வெல்ல

180

இந்த ஆண்டுக்கான (2022) கரீபியன் பிரீமியர் லீக் (CPL T20) தொடரில் செயின்ட்  லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாட இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான நிரோஷன் டிக்வெல்ல ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>> இலங்கை 2023-27ம் ஆண்டுவரை விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த மகீஷ் தீக்ஷன, சீக்குகே பிரசன்ன ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இந்த தொடரில் விளையாடும் அடுத்த வீரராக நிரோஷன் டிக்வெல்ல மாறியிருக்கின்றார்.

எனினும் இலங்கை வீரர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத்தை கருத்திற் கொண்டு, கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடாத முடியாத நிலையும் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> அதிருப்தியில் ஓய்வை அறிவித்த கெவின் ஓ பிரையன்

பத்தாவது முறையாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள கரீபியன் லீக் தொடர் இம்மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, இந்த தொடரில் ஆறு அணிகள் சம்பியன் கிண்ணத்திற்காக மோதவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<