இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடருக்கான குழாத்திலிருந்து சிம்பாப்வே அணியின் பிளசிங் முஷரபாணி நீக்கப்பட்டுள்ளார்.
பிளசிங் முஷரபாணியின் முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக நெவ்மான் நியாமுரி அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
>>2026 T20 உலகக் கிண்ணம்: அரையிறுதிப் போட்டிகளுக்கான மைதானங்கள் தெரிவு<<
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்துக்கான அணியை சிக்கண்டர் ரஷா தலைமையில் கட்டியெழுப்பிவரும் சிம்பாப்வே அணியில், பிரெண்டன் டெய்லர், ரெயான் பேர்ல் மற்றும் ரிச்சர்ட் கிராவா ஆகிய வழமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சிம்பாப்வே அணியானது தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் 17ஆம் திகதி விளையாடவுள்ளதுடன், 19ஆம் திகதி இலங்கை அணியையும், அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளை 23 மற்றும் 25ஆம் திகதி விளையாடுகின்றது. தொடரின் இறுதிப்போட்டி இம்மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிம்பாப்வே குழாம்
சிக்கண்டர் ரஷா (தலைவர்), பிரைன் பென்னட், ரெயான் பேர்ல், கிரேம் கிரீமர், பிரெட்லி எவன்ஸ், கிலைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, வெலிங்டன் மஷகட்ஷா, டடிவன்சே மருமானி, டொனி முன்யாங்கோ, டசிங்கா முஷகிவா, டியோன் மேயர்ஸ், ரிச்சர்ட் கிராவா, நெவ்மான் நியாமுரி, பிரெண்டன் டெய்லர்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















