பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய மோர்கல்

167

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கல் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> அரவிந்த டி சில்வாவுக்கு மஹேல ஜயவர்தன எழுதிய கடிதம்!

மோர்னே மோர்கல் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னர் ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக மாறியிருந்தார். அவர் ஆளுகையிலான பாகிஸ்தான் அணி இலங்கை டெஸ்ட் தொடர், அதன் பின்னர் ஆப்கான் அணியுடனான ஒருநாள் தொடர் மற்றும் ஆசியக் கிண்ணத் தொடர் என்பவற்றில் ஆடியிருந்ததோடு, இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரிலும் பங்கேற்றிருந்ததோடு தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகாமலும் வெளியேறியிருந்தது.

இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட தொடர்களில் வேகப்பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் செயற்பட்டிருக்கவில்லை. இவ்வாறாக விடயங்கள் காணப்படும் நிலையிலையே மோர்னே மோர்கல் தனது பதவியினை இராஜினாமா செய்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. .

>> சம்பியன்ஷ் கிண்ண வாய்ப்பை இழந்தமை தொடர்பில் கூறும் மஹேல

இதேநேரம் பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தின் பின்னர் அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கும் நிலையில், பாகிஸ்தான் இந்த தொடரிற்கு முன்னதாக வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் ஒருவரினை நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<