LPL தொடரில் பங்கேற்கும் நான்கு சகோதர ஜோடிகள்!

668
SLC

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் வீரர்கள், போட்டி நடுவர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் என நான்கு சகோதர ஜோடிகள் பங்கேற்றுவருகின்றனர். 

வீரர்கள் என்ற ரீதியில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் சதுரங்க டி சில்வா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் ஒரே அணியில் விளையாடும் சகோதரர்களாக உள்ளனர். 

LPL தொடரில் அனுசரணையாளராக இணையும் Cycle Pure Agarbathi

இவர்களில் இளம் சகோததரான வனிந்து ஹசரங்க இலங்கை தேசிய அணிக்காக விளையாடுவதுடன், இவர்கள் இருவரும் ஒரே அணிக்காக ஒரே நேரத்தில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர். 

லங்கா ப்ரீமியர் லீக்கில் மற்றுமொரு சகோதரர்கள் இரண்டு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடிவருகின்றனர். இலங்கை தேசிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான விஷ்வ பெர்னாண்டோ மற்றும் முதற்தர போட்டிகளில் விளையாடிவரும் நவனிந்து பெர்னாண்டோ ஆகிய சகோதரர்களே இவ்வாறு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். விஷ்வ பெர்னாண்டோ கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிவருவதுடன், நவனிந்து பெர்னாண்டோ ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டு்ள்ளார்.

வீரர்களை தவிர்த்து, லேப்ரோய் சகோதரர்களான க்ரேம் லெப்ரோய் மற்றும் வெண்டெல் லெப்ரோய் ஆகியோர் போட்டி மத்தியஸ்தராக லங்கா ப்ரீமியர் லீக்கில் செயற்பட்டு வருகின்றனர். அத்துடன், ஐசிசியின் போட்டி மத்தியஸ்தர் குழாத்தில் ஒரே நேரத்தில் அங்கம் வகிக்கும் சகோதரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

அதுமாத்திரமின்றி க்ரேம் லெப்ரோய் மற்றும் வெண்டெல் லெப்ரோய் ஆகியோர், இலங்கையின் முதற்தர லீக்கில் ஒன்றாக அமையப்பெற்றுள்ள லங்கா ப்ரீமியர் லீக்கில் ஒரே ஆண்டில் போட்டி மத்தியஸ்தர்களாக செயற்படுவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளனர். 

அதேநேரம், லங்கா ப்ரீமியர் லீக்கில் போட்டி நடுவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும், கொட்டாச்சி சகோததர்கள் நான்காவது சகோதர ஜோடியாக உள்ளனர். 

நான்கு சகோததர்கள் உள்ள குடும்பத்தில் பிறந்த இவர்கள் அனைவரும், இலங்கையின் முதற்தர போட்டிகளின் நடுவர்களாக பணியாற்றியுள்ளனர். தற்போதைய நிலையில், முதல் சகோதரரான ரோஹித கொட்டாச்சி 2000ம் ஆண்டுமுதல் இலங்கையின் முதற்தர நடுவர்களாக உள்ளதுடன், தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் நடுவர் குழாத்திலும் இடம்பெற்றுள்ளார். 

இவருடன் இளைய சகோதரரான ரவீந்திர கொட்டாச்சி 2006ம் ஆண்டுமுதல் இலங்கையின் முதற்தர போட்டிகளுக்கான நடுவராக செயற்பட்டுவந்ததுடன், தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் நடுவர் குழாத்திலும் இடம்பெற்றுவருகின்றார்.

லங்கா ப்ரீமியர் லீக்கில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகளுக்கு எதிரான போட்டியில் ரவீந்திர கொட்டாச்சி நான்காவது நடுவராக செயற்பட்டதுடன், ரோஹித கொட்டாச்சி கொழும்பு கிங்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கள நடுவராக செயற்பட்டிருந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…