இலங்கை கிரிக்கெட் வீர, வீராங்கனைகளுக்கு இந்திய பயிற்சியாளர் பயிற்சி

14
Bharat Arun

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண், இலங்கை கிரிக்கெட் வீர, வீராங்களைகளுக்கு பயிற்சி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து வெளியேறும் கஸ் அட்கின்ஸன்<<

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 14 நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருப்பதோடு இதன் ஊடாகவே பாரத் அருண் தனது பயிற்சி சேவைகளை இலங்கை கிரிக்கெட் அணியின் வீர, வீராங்கனைகளுக்காக வழங்கவிருக்கின்றார். இந்த நிகழ்ச்சித் திட்டம் இலங்கை வேகப்பந்துவீச்சாளர்களின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜூன் 2ஆம் திகதி இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமாகவிருப்பதோடு அதில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிகள், மகளிர் ‘A’ அணி, U19 ஆடவர் அணிகள் ஆகியவை பங்கெடுக்கின்றன. அத்துடன் இந்த நிகழ்வில் உயர் செயற்திறன் நிலையத்தின் பயிற்சியாளர்கள், கழக மற்றும் மாகாணப் பயிற்சியாளர்களும் பங்குபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2014 முதல் 2021 வரை பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றிய பாரத் அருண் தனது பயிற்சி நிகழ்ச்சி திட்டத்தினை 19 வயதின் கீழ் தேசிய அணியுடன் இணைந்து ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் மே மாத ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளர் R. சிறீதரும் இலங்கை கிரிக்கெட் வீர, வீராங்களைகளுக்கு பயிற்சி வழங்கியமை சுட்டிக்காட்டத்தகது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<