இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டிக்கான இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் எஷான் மலிங்க இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>>புரூக், பென்டன் அதிரடியால் T20 தொடரினை கைப்பற்றிய இங்கிலாந்து
இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது T20I போட்டியின் போது பந்து வீசிக்கொண்டிருந்த போது, எஷான் மாலிங்கவின் இடது தோற்பட்டையில் உபாதை ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். போட்டியின் எஞ்சிய பகுதியிலும் அவர் ஆடியிருக்கவில்லை.
விடயங்கள் இவ்வாறு காணப்பட்டிருக்க இன்று கொழும்பு செல்லும் மாலிங்க தனது உபாதை தொடர்பில் MRI பரிசோதனைக்கு முகம் கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.
அந்தப் பரிசோதனையின் மூலம் உபாதையின் தீவிரத்தை கண்டறிந்து, அதற்கேற்ப அடுத்தகட்ட சிகிச்சை முறைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவது போட்டி நாளை (03) ஆரம்பமாகவுள்ள நிலையில், இங்கிலாந்து T20 தொடரினை 2-0 எனக் கைப்பற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















