ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பும் திமுத் கருணாரத்!

Dhaka Premier Division Cricket League 2022/23

1802

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பங்களாதேஷில் நடைபெறும் டாக்கா பிரீமியர் டிவிசன் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார். இதனால் அவர் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்புகின்றார்.

திமுத் கருணாரத்ன டாக்கா பிரீமியர் டிவிசன் கிரிக்கெட் தொடரின் சினேபுகூர் கிரிக்கெட் கழக அணிக்காக விளையாடவுள்ளார்.

திமுத் கருணாரத்ன கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடியிருந்தார். குறிப்பாக, ஒருநாள் உலகக் கிண்ண இலங்கை அணியின் தலைவராகவும் அவர் செயற்பட்டு இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். எனினும் அதன் பின்னர் அவர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஆடவில்லை. இந்த நிலையில் திமுத்திற்கு தற்போது கிடைத்துள்ள வாய்ப்ப்பு அவருடைய திறமையை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மீண்டும் வெளிப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிம் டேவிட்டின் அதிரடியோடு மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

குறித்த இந்த தொடரில் விளையாடவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட திமுத் கருணாரத்ன,

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு திரும்புவது புத்துணர்ச்சியை கொடுப்பதுடன், இந்தப் போட்டிகள் மிகவும் தேவையான ஒருநாள் போட்டிகளாக அமையவுள்ளன. இந்த தொடரின் போது என்னுடைய அனுபவங்களை அணி வீரர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவுள்ளதுடன், என்னுடைய ஆட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என்றார்.

டாக்கா பிரீமியர் டிவிசன் தொடரானது 12 அணிகள் மோதும் லிஸ்ட் ஏ போட்டிகளாக அமையவுள்ளதுடன், தொடரில் முன்னிலை பெறும் 6 அணிகள் பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், திமுத் கருணாரத்னவின் இந்த ஒருநாள் போட்டிகளுக்கான மீள்வருகை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<