கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கிண்ணம்

Asia Cup 2021

142
ICC

இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் திகதிகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா இதனை உறுதிப்படுத்தினார்.

வனிந்துவிடமிருந்து பங்களாதேஷ் வீரர்கள் தப்புவார்களா?

நாட்டின் தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக, தொடரை நடத்துவது பொருத்தமற்றதாக இருக்கும் என சுட்டிக்காட்டி தொடரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குவது மேலும் கடினம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அஷ்லி டி சில்வா, ஜூன் மாதத்தில் போட்டியை நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையுடன் பல நாடுகள் பயணத்தை அனுமதிப்பதில்லை. அனைத்து  நாடுகளும் மிகவும் இறுக்கமான கால அட்டவணையில் உள்ளன. எனவே இந்த அட்டவணைகளின் படி, ஒவ்வொரு அணியும் பங்கேற்கக்கூடிய, காலத்தை அறிவிப்பது கடினம்.

ஆனால் T20I உலகக் கிண்ணத்துக்கு முன்னர் ஆசிய கிண்ணத் தொடரை நடத்த முடியும் என நம்புகிறோம். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டி திகதியை உறுதி செய்தவுடன் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும்.என்றார்.

இந்த ஆண்டுக்கான ஆசியக்கிண்ணத் தொடரை எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…