இறுதி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து குழாத்தில் மீளும் அஜாஸ் பட்டேல்

105

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல்  மற்றும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் டொம் பிளண்டெல் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

>>செத்மிக்கவின் அபார பந்துவீச்சில் இலங்கை இளையோருக்கு முதல் வெற்றி

நியூசிலாந்து தற்போது தமது நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடன், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நிறைவடைந்து நியூசிலாந்து 1-0 என முன்னிலை அடைந்திருக்க, தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி வியாழன் (18) ஆரம்பமாகுகின்றது.

மவுண்ட் மௌங்னாயில் தொடங்கவுள்ள இந்த மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கான குழாத்திலேயே அனுபவ சுழல்வீரர் அஜாஸ் பட்டேல் மற்றும் டொம் பிளன்டல் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

அஜாஸ் பட்டேல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோற்பட்டை காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ப்ளைர் டிக்னருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். அஜாஸ் பட்டேல் 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் முதல் டெஸ்டின் போது ஏற்பட்ட தொடை உபாதையில் இருந்து மீண்ட டொம் பிளண்டெல் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இவர் மிட்செல் ஹேயிற்குப் பதிலாக அணியில் இடம்பெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

நியூசிலாந்து குழாம்

 

டொம் லேதம் (தலைவர்), டொம் பிளண்டெல், மைக்கேல் பிரஸ்வெல், கிறிஸ்டியன் கிளார்க், டெவோன் கொன்வே, ஜேக்கப் டப்பி, ஷேக் போல்க்ஸ், டேரைல் மிச்செல், அஜாஸ் பட்டேல், கிளன் பிலிப்ஸ், மைக்கேல் ரே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், வில் யங்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<