2026ஆம் ஆண்டிற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் ஆரம்பப் போட்டிகள் சிலவற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தலைவர் பேட் கம்மின்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வூட் ஆகியோர் பங்கெடுப்பதில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் நியூசிலாந்து A கிரிக்கெட் அணி; போட்டி அட்டவணை வெளியீடு
இரண்டு வீரர்களும் உபாதையில் இருந்து தேறி வருகின்ற நிலையில், வீரர்களின் உடல்நலன் மற்றும் பணிச்சுமை என்பவற்றினை கருத்திற் கொண்டு இந்த வீரர்களுக்கு IPL தொடரின் முதல் போட்டிகள் சிலவற்றில் ஓய்வு வழங்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தும் பேட் கம்மின்ஸ் மற்றும் தொடரின் நடப்புச் சம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஹேசல்வூட் ஆகியோர் இல்லாதது அந்தந்த அணிகளுக்கு ஆரம்பத்திலேயே ஒரு சவாலாக அமையும் என எதிர்பார்க்ப்படுகின்றது.
இந்த வீரர்கள் தவிர 2026ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஏனைய ஆஸி. வீரர்கள் இவ்வார இறுதியில் இந்தியா வந்தடைவார்கள் என நம்பப்படுகின்றது.
2026ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் முதல் போட்டி சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையில் இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















