கன்னி IPL கிண்ணத்தை வென்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்!

Indian Premier League 2025

48
RCB win maiden IPL title

இந்தியாவில் நடைபெற்ற 18வது பருவகால IPL தொடரின் சம்பியன் மகுடத்தை ரஜத் பட்டிதார் தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிக்கொண்டது.

அஹமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூர் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தங்களுடைய முதலாவது IPL கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.

>>கண்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கெளரவம்<<

போட்டியில் பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 190 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி 43 ஓட்டங்களையும், ரஜத் பட்டிதார் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். இவர்களுடன் மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா, லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பங்களித்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் அர்ஷ்டீப் சிங் மற்றும் கெயல் ஜெமிஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ச் ஆர்யா மற்றும் பிரம்சிங்ரன் சிங் ஆகியோர் ஓரளவு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

எனினும் இவர்கள் மந்தமான வேகத்தில் ஓட்டத்தை பெற்றுக்கொடுக்க, அடுத்துவந்த துடுப்பாட்ட வீரர்களில் ஜோஸ் இங்லிஷ் 23 பந்துகளில் 39 ஓட்டங்களை விளாசினார். இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் சிரேயாஸ் ஐயர் வந்தவேகத்தில் ஆட்டமிழக்க, நெஹல் வதேரா மற்றும் சஸாங்க் சிங் ஆகியோர் ஆரம்பத்தில் தடுமாறினார்.

>>வளர்ந்து வரும் மகளிர் ஆசிய கிண்ணத் தொடர் ஒத்திவைப்பு<<

இறுதியாக சஸாங்க் சிங் ஜோஷ் ஹெஸல்வூட்டின் ஓவரில் 22 ஓட்டங்களை விளாசி 30 பந்துகளில் 61 ஓட்டங்களை விளாசிய போதும், 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந் பஞ்சாப் கிங்ஸ் அணி கிண்ணத்தை தவறவிட்டது.

இதேவேளை பெங்களூர் அணிக்காக கடந்த 18 வருடங்களாக விளையாடிவந்த வீரரும், IPL தொடரில் ஒரே அணிக்காக விளையாடிய ஒரேயொரு வீரருமான விராட் கோஹ்லியும் தன்னுடைய முதல் IPL கிண்ணத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<