இலங்கைக்கு மீண்டும் தோல்வி

133

காத்மண்டுவில் நடைபெற்று வரும் 14 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன தெற்கு மற்றும் மத்திய பிராந்திய பெண்கள் கால்பந்தாட்டப் போட்டிகளில் ‘ஏ’ குழுவில் பங்குபற்றும் இலங்கை பெண்கள் அணி மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.

 தசரத் விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற போட்டியில் இலங்கை பெண்கள் அணியை எதிர்த்தாடிய நேபாள பெண்கள் அணி 6 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் அமோக வெற்றியீட்டியது.

தனது ஆரம்பப் போட்டியில் மாலைதீவுகள் அணியை 6–0 என வெற்றிகொண்டிருந்த இலங்கை பெண்கள் அணிஇ இரண்டாவது போட்டியில் 1– 11 என ஈரானிடம் தோல்வி அடைந்திருந்தது. இக் குழுவிலிருந்து நேபாளமும் ஈரானும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.