இலங்கை அணியின் தலைவராக பாசில் மரீஜா தெரிவு(

113

பிலிப்பைன்சில் இடம்பெறவுள்ள ஆசிய பிராந்திய றகர் போட்டித் தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக கண்டி அணியின் பிரபல வீரர் பாசில் மரீஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி பிலிப்பைனில் இப்போட்டிகள் இடம்பெற உள்ளன.  சுமார் 25இ000 பார்வையாளர்களை உள்ளடக்கக் கூடிய புலகான் விளையாட்டரங்கில் இப்போட்டிகள் இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜப்பான்இ ஹாங்கொங்இ கொரியாஇ இலங்கைஇ பிலிப்பைன்ஸ் உட்பட ஆசியாவின் முதல் ஐந்து முன்னணி நாடுகள் இப்போட்டியில் பங்குபற்றவுள்ளன. முதலாம் பிரிவு போட்டிகளில் கஸகஸ்தான்இ பிலிப்பைன்ஸ்இ சிங்கப்பூர்இ இலங்கை ஆகிய  அணிகள் போட்டியிடுகின்றன. மேற்படி அணிக்கு தலைமை தாங்கும் பாஜில் மரீஜா கண்டிஇ கட்டுகாஸ்தோட்டையைச் சேர்ந்தவர். இவர் கண்டி அணி உட்பட அணிக்கு ஏழு பேர் கொண்ட இலங்கை தேசிய அணிக்கு தலைமைதாங்கிய அனுபவம் கொண்ட ஒரு தலைசிறந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.