ஆஸியின் மோசமான ஆட்டங்களில் ஒன்று இங்கிலாந்து மோதல்

176
©AFP

இங்கிலாந்துக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தமையால் பின்னடைவை சந்திக்க நேரிட்டதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைவர் ஆரோன் பின்ச், இது அவுஸ்திரேலியாவின் மிக மோசமான ஆட்டங்களில் ஒன்று எனவும் தெரிவித்தார்.  

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜேசன் ரோயின் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (11) பேர்மிங்கம் ……

அவுஸ்திரேலியாவின் அரையிறுதி ஆட்டம் மிகவும் பரிதாபமாக இருந்தது. துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் அவர்களால் இங்கிலாந்து அணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது.  

அவுஸ்திரேலியா கடந்த முறை சம்பியன் பட்டத்தை வென்ற அணி என்றாலும், இந்த முறை இங்கிலாந்து அணியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அரையிறுதியுடன் தன் பயணத்தை முடித்துக் கொண்டது.

இந்த நிலையில், தோல்விக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் கூறியதாவது

இந்த உலக கிண்ணத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், இந்த ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களில் மோசமாக ஆடி, அதன் மூலம் போட்டியில் இருந்தே வெளியேற்றப்பட்டோம் என்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது

எல்லா பெருமையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களையே சாரும். ஸ்விங் செய்வதிலும், பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்து வீசுவதிலும் அசத்தினர். முதல் அரைமணி நேரம் அவர்கள் பந்து வீசிய விதம் தான் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.

உலகக் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்த ஸ்டாக்

12 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் ……

அவர்கள் துடுப்பாட்டத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே நாங்கள் பந்தைக் கொண்டு ஆக்ரோஷமாக இருக்க வேண்டியிருந்தது. எனவே, அவர்களை வீழ்த்துவதற்கு நாங்கள் பத்து வாய்ப்புகளை எடுக்க வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும். எனவே இது ஒரு விளையாட்டாக இருக்கப்போவதில்லை என்பதை அறிந்து வைத்திருந்தோம். இந்தப் போட்டி முழுவதும் நாங்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்என தெரிவித்தார்.

இதேநேரம், அவுஸ்திரேலியாவின் பின்னடைவுக்கு முக்கிய வீரர்கள் உபாதைக்குள்ளாகியது முக்கிய காரணமாக இருந்தது என சுட்டிக்காட்டிய பின்ச், நம்பிக்கையுடன் அரையிறுதிக்கு வந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்து இன்று இங்கு வந்தோம். இந்தத் தொடரிற்காக செய்த முன் ஆயத்தம் தான் இவ்வளவு தூரம் எங்களை கொண்டு வந்தது. பின்னர் போட்டியின் மூலம் நாங்கள் கட்டியெழுப்ப விரும்பிய வேகம் மிகவும் முக்கியமானதாக இருந்தது

நாங்கள் அதை நன்றாக உணர்ந்தோம், நாங்கள் நன்றாக பயிற்சி பெற்றோம், ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் எங்களுக்கு போதுமான இடைவெளி இருந்தது மற்றும் வீரர்களுக்கு புத்துணர்ச்சியாக விளையாடுவதற்கான காலமும் போதுமானதாக இருந்தது. எனவே இது எப்படி முடிந்தது என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக இந்தத் தொடரில் எங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கவலையாக உள்ளதுஎன்றார்

இருப்பினும், தமது அணியின் அண்மைக்கால வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த பின்ச்,கடந்த ஒரு வருடத்தில் அவுஸ்திரேலியா நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில், அவுஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் போராடி இருந்தது. ஆனால் உலகக் கிண்ணத்துக்கு முன்பே எமது வீரர்கள் வழமையான ஆட்டத் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் இம்முறை உலகக் கிண்ணத்தில் புள்ளிகள் இரண்டாவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றோம்” என அவர் கூறினார்.

நாங்கள் 12 மாதங்களுக்கு முன்பு இருந்த இடத்தைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு பெரிய அளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு கடின உழைப்பு மற்றும் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உண்மையிலேயே பெருமை. ஆனால் அதே நேரத்தில் ஒரு அரையிறுதியை வென்று மற்றொரு உலகக் கிண்ணத்தை வெல்வதற்காக இன்று இங்கு வந்தோம்என தெரிவித்தார்

இதேநேரம், அடுத்த உலகக் கிண்ணத்துக்கான திட்டத்தை உருவாக்குவது குறித்து அவுஸ்திரேலியா கூடுதல் அவதானதம் செலுத்தும் என்று பின்ச் கூறினார்.

ஒரு உலகக் கிண்ணத்துக்குப் பிறகு நீங்கள் எப்போதும் அடுத்த உலகக் கிண்ணத்தை நோக்கி ஒரு கண் வைத்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அடுத்த இரண்டு மாதங்களில் நாங்கள் உட்கார்ந்து அதைப் பற்றி பேசத் தொடங்குவோம். அடுத்த நான்கு வருடங்களில் எங்களை சிறந்த முறையில் திட்டமிடலாம் மற்றும் தயாரிக்கலாம் மற்றும் மேம்படுத்தலாம் என்று சிந்திப்போம்.  

ஒவ்வொரு அணியும் அதைச் செய்யும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை மேம்படுத்தலாம், நீங்கள் செய்ய வேண்டிய சில வேலைகள் தேவை என்பதை நீங்கள் அடையாளம் காணக்கூடிய பகுதிகள் மற்றும் அது நிகழும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் ஒரு பயிற்சியாளராக, ஒரு நிர்வாகமாக, எல்லோரும் ஒரே பக்கத்தில் வருவதும், எல்லோரும் ஒரே திசையில் இழுப்பதும், அதுதான் நாங்கள் செய்திருக்கிறோம், நாங்கள் மிகவும் அதிஷ்டசாலிகள். ஆனால் நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றத்தைக் கொடுத்தது என அவர் மேலும் தெரிவித்தார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<