இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேமி சிடன்ஸ் (Jamie Siddons) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஓராண்டுக்கு இவர் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சிறந்த பயிற்சி அனுபவம் கொண்ட ஜேமி சிடன்ஸ், 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் தேசிய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
மூன்றாம் நிலை (Level 3) தகுதியுள்ள பயிற்சியாளரான இவர், 2015 முதல் 2020 வரை தெற்கு அவுஸ்திரேலிய (Redbacks) அணிக்கும், 2011 முதல் 2015 வரை நியூசிலாந்தின் வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ் (Wellington Firebirds) அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராகச் செயற்பட்டுள்ளார்.
ஹேலி மெதிவ்ஸின் அசத்தல் சதத்துடன் மேற்கிந்திய தீவுகள் ஆறுதல் வெற்றி
...
இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள மகளிருக்கான தேசிய சுப்பர் லீக் T20 2026 போட்டித்தொடர் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டித் தொடரில் டீம் ப்ளூஸ், டீம் க்ரேஸ், டீம் க்ரீன்ஸ் மற்றும் டீம்...
இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவியாக தொடர்ந்தும் சமரி அத்தபத்து செயற்படவுள்ளதுடன், உதவி தலைவியாக ஹர்ஷிதா சமரவிக்ரம பெயரிப்பட்டுள்ளார்.
டிசம்பர் 21, 23, 26, 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் ஐந்து T20I சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன....
இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் உயர் செயற்திறன் அபிவிருத்தி ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் பூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
லீசெஸ்டர்சையர்...
2026 ஆம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த இருபதுக்கு-20 (T20) லீக் தொடரின் ஆறாவது பதிப்பு, கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானம், கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RPICS), பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம் (PICS) மற்றும் தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RDICS) ஆகிய நான்கு பிரதான மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையத்தளம் (Online portal) 2026 மே 4 ஆம் திகதி திறக்கப்படும்
சர்வதேசத் தரத்திலான இலங்கையின் முதன்மை உள்நாட்டு இருபதுக்கு-20 தொடரான லங்கா பிரீமியர் லீக், கடந்த 2020 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இப்போட்டித் தொடரை லங்கா பிரீமியர் லீக்கின் உரிமையாளரான இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அதன் உரிமைதாரரான ஐ.பி.ஜி (IPG Group) நிறுவனத்துடன் இணைந்து நடாத்துகின்றது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சமந்த தொடங்வெல லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளராக தொடர்ந்து செயற்படுவார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<