மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து தொடரில் இலங்கையின் 8 மாகாணங்களைச் சேர்ந்த அணிகள் போட்டியிடுவதுடன், போட்டிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும்...
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியுடன் (Sri Lanka Cricket XI) ஆடிய பயிற்சிப் போட்டியில்
6 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முதன்முறையாக LPL சம்பியன் பட்டம் வென்ற கோல் கெலன்ட்ஸ்
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, இலங்கை அணியுடனான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட் பதினொருவர் அணியினை எதிர் கொண்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (07) கொழும்பு NCC மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் சோனால் தினுஷ தலைமையிலான இலங்கைத் தரப்பு முதலில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து கொண்டது.
பின்னர் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணி, ரவிந்து ரசன்த மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தம் செய்தது.
இலங்கைத் தரப்பில் அரைச்சதங்களை விளாசிய வீரர்களிவ் ரவிந்து ரசன்த 71 ஓட்டங்களும், நிஷான் மதுஷ்க 66 ஓட்டங்களும் பெற்றனர். இவர்கள் தவிர சோனால் தினுஷ 52 ஓட்டங்கள் பெற்றார்.
இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 142 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 63 ஓட்டங்கள் பெற்று, மைதானத்தில் இருந்து (Retired Hurt) வெளியேறினார்.
பின்னர் இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.
இலங்கைத் தரப்பின் பந்துவீச்சில் அசங்க மனோஜ் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இலங்கை டெஸ்ட் தொடரில் இவ்வாரம்...