Army Athletics Championship
No posts to display
Latest articles
Sinhala
පාකිස්තානය සහ අයර්ලන්තය පළමු ජයග්රහණ වාර්තා කරයි
10 වැනි කාන්තා විස්සයි විස්ස ලෝක කුසලාන ක්රිකට් තරගාවලියේ තවත් තරග ත්රිත්වයක් නිමා වූ රාත්රියේ දී අවසන් වූ අතර එහි දී මෙවර තරගාවලියේ මංගල ජයග්රහණ...
Tamil
பாரிஸின் அதிரடி சதத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது மே.தீவுகள் பயிற்சியக அணி
ஷாக்கீரே பாரிஸின் அதிரடி சதத்தின் உதவியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில், இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்து தொடரை 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
கொழும்பு என்.சி.சி மைதானத்தில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 349 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்த இந்த ஆடுகளத்தில், இலங்கை பந்துவீச்சாளர்களால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்டக் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்போட்டியின் நாயகனாக உருவெடுத்த 22 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான ஷாக்கீரே பாரிஸ் 139 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கலாக 177 ஓட்டங்களை விளாசி அசத்தினார். இவருக்கு பக்கபலமாகத் திகழ்ந்த கெவ்லோன் ஆண்டர்சன் 78 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 86 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்காக வெறும் 155 பந்துகளில் 222 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்து, அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது.
350 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. 2ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சினெத் ஜயவர்தன, வேகப்பந்து வீச்சாளர் அமாரி குட்ரிட்ஜின் பந்துவீச்சில் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, சிறந்த ஃபார்மில் இருந்த அணியின் தலைவர் நிபுன் தனஞ்சய 2 பவுண்டரிகளுடன் 8 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெடியா பிளேட்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் 3 ஓவர்களுக்குள்ளேயே 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி பெரும் நெருக்கடிக்குள்ளானது.
சினெத்தின் அதிரடி சதத்தால் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு வெற்றி
இதன்பின் ஜோடி சேர்ந்த விஷேன் ஹலம்பகே மற்றும் தினுர களுபஹன ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டுக்காக 63 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்க முயன்றனர். அதிரடியாக விளையாடிய ஹலம்பகே 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 42 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது 14ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய களுபஹன 61 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர், இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் காப்பாளர் ரமேஷ் சில்வாவுடன் இணைந்து மேலும் 62 ஓட்டங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ரமேஷ் சில்வா 64 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் அவர் சாமிக்க ஹீனடிகலவுடன் (32 ஓட்டங்கள்) இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 51 ஓட்டங்களைச் சேர்த்தார்.
இலங்கை வீரர்களின் இந்த போராட்டத்திற்கு மத்தியிலும், அவர்களால் இலக்கை நோக்கி அச்சுறுத்தல் விடுக்க முடியவில்லை. கடைசி 10 ஓவர்களில் கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில், வெற்றிக்கு 101 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. இறுதிநேரத்தில் ட்ரவீன் மெத்யூ 21 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ஓட்டங்களைப் பெற்றுப் போராடினார். எனினும், மறுமுனையில் அவருக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 42.4 ஓவர்களில் 273 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட அமாரி குட்ரிட்ஜ் 7 ஓவர்களில் 56 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜிஷான் மொதாரா மற்றும் ஜியோவோண்டே டெபெய்ஸா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்படி, ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 4 நாட்கள் கொண்ட போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி 1-0 என இழந்திருந்த போதிலும், கொழும்பில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-1 எனத் தொடரைக் கைப்பற்றி இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
National Cricket
Record-Breaking Jangoo-Chase stand puts West Indies in command against Sri Lanka
West Indies tightened their grip on the opening Test against Sri Lanka after piling...
Tamil
ரமேஷ் தரங்கவின் ஒலிம்பிக் பயணத்திற்கு உஸ்வத்த பிஸ்கட் நிறுவனம் அனுசரணை
இலங்கை தடகள வரலாற்றில் சாதனை படைத்த ஈட்டி எறிதல் விளையாட்டு வீரரான ரமேஷ் தரங்க பத்திரகேயின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக உஸ்வத்த பிஸ்கட் தனியார் நிறுவனம் இணைந்து கொண்டுள்ளது. இது தொடர்பான விசேட பாராட்டு மற்றும் கெளரவிப்பு விழா, ரமேஷ் தரங்கவின் பிறப்பிடமான கென்னாத்துடாவிலுள்ள வின்ரோ வரவேற்பு மண்டபத்தில் கடந்த ஜூன் 22 ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
இலங்கை தடகளத் துறையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்ற அவரது வரலாற்றுச் சாதனைகளைக் கெளரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், விளையாட்டுத் துறை பொறுப்பதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டு ரமேஷின் சர்வதேச வெற்றிகளைப் பாராட்டினர்.
விளையாட்டு அரங்கில் ரமேஷ் தரங்க நிகழ்த்திய அசாதாரண சாதனைகள் இலங்கை தடகள வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. அவர் 2026 ஆம் ஆண்டு ஈட்டி எறிதல் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையைப் பதிவு செய்தார். இதன் மூலம் உலக தரவரிசையிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றதுடன், ஒலிம்பிக் தகுதிக்கான தனது வாய்ப்பையும் வலுப்படுத்தியுள்ளார்.
மீண்டும் டயமண்ட் லீக் அரங்கில் முத்திரை பதித்தார் ருமேஷ் தரங்க
இலங்கை சாதனையை முறியடித்து உலக மெய்வல்லுனர்...










