இலங்கை கிரிக்கெட்டினால் 225 பாடசாலைகளுக்கு லெதர் பந்துகள் விநியோகம்

122

நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 225 பாடசாலைகளுக்கு 8 மில்லியன் ரூபா பெறுமதியான 7,680 லெதர் பந்துகள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கமும் இணைந்து ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இவ்வாறு பாடசாலைகளுக்கு லெதர் பந்துகளை பகிர்ந்தளிக்கும் செயற்றிட்டத்தை கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக, பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் லெதர் பந்துகளை பகிர்ந்து அளிக்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் கடந்த முதலாம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்றது.    

நாடாளவிய ரீதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மாத்திரம் இவ்வாறு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேநேரம், இதன் முதற் கட்டத்தின் கீழ் 60 பாடசாலைகளுக்கு இதன்போது லெதர் பந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சொத்து விபரங்களை வெளியிடுவதாக அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் தமது சொத்து

அத்துடன், பாடசாலை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள டிவிஷன்-1, டிவிஷன்-2 மற்றும் டிவிஷன்-3 பாடசாலைகள், 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இந்த லெதர் பந்துகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஏனைய பாடசாலைகளுக்கான லெதர் பந்துகள் கடந்த 2ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் நன்மதிப்பை பாதுகாத்து வீரர்கள் நடந்துகொள்ள வேண்டும் எனவும், விளையாட்டின் முன்னேற்றத்துக்காக புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா இதில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்புமிக்க அதிகாரியும், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான கமல் பத்மசிறி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தின் அதிபருமான ஒஷார பண்டிதரத்ன, செயலாளர் டில்ஷான் சில்வாவும் கலந்துகொண்டனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க