ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்மி சில்வா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவர் பதவியில் பல ஆண்டுகள் பணியாற்றியிருந்த நிலையில், தற்போது கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிக்கில்டன் கன்னி சதம்; வேகத்தால் மிரட்டிய இலங்கை அணி
இதுதொடர்பில் கருத்தினை பகிர்ந்துக்கொண்ட சம்மி சில்வா “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தலைமை தாங்குவது எனக்கு மிகப் பெரிய மரியாதையாகும். கிரிக்கெட் என்பது ஆசியாவின் இதயமாகும், மேலும் கிரிக்கெட்டை மேம்படுத்த, உருவாகும் திறமைகளுக்கு வாய்ப்புகளை வழங்க, மற்றும் இந்த அழகிய விளையாட்டின் மூலம் எங்களை ஒன்றிணைக்கும் உறவுகளை வலுப்படுத்த அனைத்து உறுப்பினர் நாடுகளுடனும் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறேன்.” என்றார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயற்பட்டுவந்த இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், சம்மி சில்வா குறித்த பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<