நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக ரொப் வோல்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரொப் வோல்டர் நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், தென்னாபிரிக்காவின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.
>>இலங்கை வரும் பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் அறிவிப்பு<<
இவரின் கீழ் தென்னாபிரிக்க ஆடவர் அணி 2023ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதி, இந்த ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஷ் கிண்ண அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்ததுடன், 2024ம் ஆண்டு நடைபெற்ற2024ம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருந்தது.
ரொப் வோல்டர் நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர் எதிர்வரும் 2028ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் நிறைவடையும்வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே 2028ம் ஆண்டு நவம்பர் மாதம்வரை நியூசிலாந்து அணியுடன் இணைந்திருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருடைய பயிற்றுவிப்பின் கீழ் நியூசிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப், லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக், ஐசிசி T20 உலகக்கிண்ணம் 2026, ஐசிசி உலகக்கிண்ணம் 2027 மற்றும் ஐசிசி T20 உலகக்கிண்ணம் போன்ற முக்கியமான தொடர்களில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த 7 ஆண்டுகளாக கேரி ஸ்டீட் செயற்பட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<