இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) புதிய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
தற்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குழுவிற்குப் பதிலாகவே, இந்தப் புதிய தெரிவுக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் இன்று (21) வெளியிடப்பட்ட கடிதத்தில் புதிய தெரிவுக்குழுவில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கபில விஜேகுணவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தெரிவுக்குழு தலைவராக பெயரிடப்பட்டிருக்கின்றார்.
அதேநேரம் இந்தப் புதிய தெரிவுக்குழுவில் அமல் சில்வா, பிரெண்டன் குருப்பு, வருண வரகொட மற்றும் வெனஸ்ஸ டி சில்வா ஆகியோர் உறுப்பினர்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இடைக்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த தெரிவுக் குழுவின் மாற்றம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<






















