இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் வீரர்கள், போட்டி நடுவர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் என நான்கு சகோதர ஜோடிகள் பங்கேற்றுவருகின்றனர்.
வீரர்கள் என்ற ரீதியில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் சதுரங்க டி சில்வா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் ஒரே அணியில் விளையாடும் சகோதரர்களாக உள்ளனர்.
LPL தொடரில் அனுசரணையாளராக இணையும் Cycle Pure Agarbathi
இவர்களில் இளம் சகோததரான வனிந்து ஹசரங்க இலங்கை தேசிய அணிக்காக விளையாடுவதுடன், இவர்கள் இருவரும் ஒரே அணிக்காக ஒரே நேரத்தில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.


அதுமாத்திரமின்றி க்ரேம் லெப்ரோய் மற்றும் வெண்டெல் லெப்ரோய் ஆகியோர், இலங்கையின் முதற்தர லீக்கில் ஒன்றாக அமையப்பெற்றுள்ள லங்கா ப்ரீமியர் லீக்கில் ஒரே ஆண்டில் போட்டி மத்தியஸ்தர்களாக செயற்படுவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

நான்கு சகோததர்கள் உள்ள குடும்பத்தில் பிறந்த இவர்கள் அனைவரும், இலங்கையின் முதற்தர போட்டிகளின் நடுவர்களாக பணியாற்றியுள்ளனர். தற்போதைய நிலையில், முதல் சகோதரரான ரோஹித கொட்டாச்சி 2000ம் ஆண்டுமுதல் இலங்கையின் முதற்தர நடுவர்களாக உள்ளதுடன், தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் நடுவர் குழாத்திலும் இடம்பெற்றுள்ளார்.
இவருடன் இளைய சகோதரரான ரவீந்திர கொட்டாச்சி 2006ம் ஆண்டுமுதல் இலங்கையின் முதற்தர போட்டிகளுக்கான நடுவராக செயற்பட்டுவந்ததுடன், தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் நடுவர் குழாத்திலும் இடம்பெற்றுவருகின்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…




















