இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஐவரடங்கிய குழுவை நியமிக்க உத்தரவு

151

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக முகாமைத்துவ குழுவொன்றை நியமிக்குமாறு சட்ட மா அதிபர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நடைபெறும் வரை ஐந்து பேர் கொண்ட நிர்வாகக் குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் சபைக்கு நியமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யத் தயாராகும் முரளிதரன்

எனவே, தற்போதுள்ள இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்திற்குப் பதிலாக ஐவரடங்கிய முகாமைத்துவக் குழுவொன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேகோன் தெரிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதனால் கிரிக்கெட் நிர்வாகப் பணிகளில் அவர்கள் தொடர முடியாதென்றும், அவ்வாறு தொடர்ந்தால் இலங்கை கிரிக்கெட்டின் சட்டத்துக்கு முரணானது என கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எழுத்து மூல ஆவணமொன்றின் மூலம் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தியது.

இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவு விடுத்திருந்தார்

ஒருநாள் போட்டிகளில் பாரிய வீழ்ச்சியை கண்டதா இலங்கை?

இதனை ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளுக்கான புதிய தேர்தல் நடைபெறும் வரை முகாமைத்துவ குழுவொன்றை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலொசனை வழங்கியது

இதற்கமைய, இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்றை இன்றைய தினம் நியமிக்க தீர்மானித்துள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன் தெரிவித்துள்ளார்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…