ஐ.பி.எல். தொடருக்காக தயாராகும் பென் ஸ்டோக்ஸ்!

59

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் மாதம் 15ம் திகதி நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. எனினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக எதிர்வரும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், ஐ.பி.எல். தொடர் பிற்போடப்படும் என்ற எவ்வித தகவல்களும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அப்துர் ரசாக்கிற்கு அழைப்பு விடுத்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு உறுப்பினராக செயற்பட வேண்டும் என முன்னாள் சுழல் …….

இதுதொடர்பில் பென் ஸ்டோக்ஸ் குறிப்பிடுகையில், “இப்போதைய நிலையில், அடுத்து வரும் போட்டித்தன்மமையான கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல். இடம்பெறவுள்ளது. அதற்காக தயாராக வேண்டும். 

“நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் உள்ளது. எனினும், அதற்கு நான் உடல் ரீதியாக தயாராக வேண்டும். அப்படி இல்லையென்றால் என்னால் விளையாட முடியாது. 

“அதேநேரம், இப்போது நான் மூன்று வாரங்களுக்கு பயிற்சியில் ஈடுபடாமல் இருக்க முடியாது. ஏப்ரல் 20ம் திகதி கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பினால், உடனடியாக தயாராகி என்னால் சிறப்பாக விளையாட முடியாது. எனவே, இப்போதில் இருந்து பயிற்சிகளில் ஈடுபட்டு போட்டிகளுக்காக தயாராக வேண்டும்” என்றார். 

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும், தற்போது மிகப்……..

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் முன்னணி சகலதுறை வீரராக உள்ளார். எனினும், இறுதியாக இலங்கையில் நடைபெறவிருந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக உபாதைக்கு முகங்கொடுத்திருந்த இவர், குணமடைவதற்கான ஓய்வில் இருந்தார். எவ்வாறாயினும், குறித்த தொடரானது கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

அத்துடன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைகளானது நடைபெறவிருந்த கௌண்டி கிரிக்கெட் தொடரினை எதிர்வரும் மே மாதம் இறுதிவரை ஒத்திவைத்துள்ளதுடன், தொடர் நடைபெறுவதற்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.  

இவ்வாறு பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், திகதிகள் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஐ.பி.எல். தொடரும் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<