சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ்

14
ENGLAND CRICKET

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

>>முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாளில் வலுப்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள்<<

அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான ஸ்டோக்ஸ் இந்த ஞாயிறுக்கிழமை (28) ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பந்துவீசிக் கொண்டிருந்தபோது, அவரது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையினை முடிவுக்குக் கொண்டுவரும் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.

35 வயதான பென் ஸ்டோக்ஸ், லண்டன் இரவு விடுதி ஒன்றில் நடந்த கைகலப்புச் சம்பவமொன்றில் சிக்கியதன் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

எனினும் அடுத்த போட்டியில் வாய்ப்பினைப் பெற்ற அவர் இந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் தொடங்க முன்பே ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை இங்கிலாந்து அணி வீரர்களிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகின்றது.

தான் ஓய்வு பெறும் விடயம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் ஸ்டோக்ஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“காரணங்கள் பிறகு வரலாம், ஆனால் இந்த அணிக்காகவும், உங்களுக்காகவும், இதற்கு முன் இருந்தவர்களுக்காகவும் நான் பலமுறை எனது முழு ஆற்றலையும் கொடுத்து உழைத்திருக்கிறேன். ” என்றார்.

இரண்டு உலகக் கிண்ணங்களை பெற்றுக் கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு உதவிய ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது அந்த நாட்டு இரசிகர்களுக்கு பாரிய இழப்பாக மாறியிருக்கின்றது.

இங்கிலாந்துக்காக 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் அதில் 44 போட்டிகளுக்கு அணியின் தலைவராக செயற்பட்டிருக்கின்றார். அத்துடன் அவர் 114 ஒருநாள் போட்டிகளிலும், 43 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<