HomeTagsTamil Cricket news

Tamil Cricket news

இங்கி. ஒருநாள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகும் இளம் சகலதுறை வீரர்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு,...

பாரிஸின் அதிரடி சதத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது மே.தீவுகள் பயிற்சியக அணி

ஷாக்கீரே பாரிஸின் அதிரடி சதத்தின் உதவியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில், இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்து தொடரை 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.  கொழும்பு என்.சி.சி மைதானத்தில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 349 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்த இந்த ஆடுகளத்தில், இலங்கை பந்துவீச்சாளர்களால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்டக் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  இப்போட்டியின் நாயகனாக உருவெடுத்த 22 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான ஷாக்கீரே பாரிஸ் 139 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கலாக 177 ஓட்டங்களை விளாசி அசத்தினார். இவருக்கு பக்கபலமாகத் திகழ்ந்த கெவ்லோன் ஆண்டர்சன் 78 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 86 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்காக வெறும் 155 பந்துகளில் 222 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்து, அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது.  350 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. 2ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சினெத் ஜயவர்தன, வேகப்பந்து வீச்சாளர் அமாரி குட்ரிட்ஜின் பந்துவீச்சில் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, சிறந்த ஃபார்மில் இருந்த அணியின் தலைவர் நிபுன் தனஞ்சய 2 பவுண்டரிகளுடன் 8 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெடியா பிளேட்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் 3 ஓவர்களுக்குள்ளேயே 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி பெரும் நெருக்கடிக்குள்ளானது.  சினெத்தின் அதிரடி சதத்தால் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு வெற்றி இதன்பின் ஜோடி சேர்ந்த விஷேன் ஹலம்பகே மற்றும் தினுர களுபஹன ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டுக்காக 63 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்க முயன்றனர். அதிரடியாக விளையாடிய ஹலம்பகே 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 42 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது 14ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.  மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய களுபஹன 61 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர், இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் காப்பாளர் ரமேஷ் சில்வாவுடன் இணைந்து மேலும் 62 ஓட்டங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.  இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ரமேஷ் சில்வா 64 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் அவர் சாமிக்க ஹீனடிகலவுடன் (32 ஓட்டங்கள்) இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 51 ஓட்டங்களைச் சேர்த்தார்.  இலங்கை வீரர்களின் இந்த போராட்டத்திற்கு மத்தியிலும், அவர்களால் இலக்கை நோக்கி அச்சுறுத்தல் விடுக்க முடியவில்லை. கடைசி 10 ஓவர்களில் கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில், வெற்றிக்கு 101 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. இறுதிநேரத்தில் ட்ரவீன் மெத்யூ 21 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ஓட்டங்களைப் பெற்றுப் போராடினார். எனினும், மறுமுனையில் அவருக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 42.4 ஓவர்களில் 273 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட அமாரி குட்ரிட்ஜ் 7 ஓவர்களில் 56 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜிஷான் மொதாரா மற்றும் ஜியோவோண்டே டெபெய்ஸா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  இதன்படி, ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 4 நாட்கள் கொண்ட போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி 1-0 என இழந்திருந்த போதிலும், கொழும்பில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-1 எனத் தொடரைக் கைப்பற்றி இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.   >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

சினெத்தின் அதிரடி சதத்தால் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு வெற்றி

சினெத் ஜயவர்தன விளாசிய அதிரடிச் சதத்தின் உதவியோடு, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சிக அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது...

இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவை சந்தித்த ஜெய் ஷா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிச) தலைவர் ஜெய் ஷா மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர்...

இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய ஷாருஜன்

ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (18) நிறைவடைந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணிக்கு...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.   இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பாதியிலேயே நடந்து கொண்டிருக்கும் வேளையில் இவரது இந்த முடிவு வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கிய அவரது 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.  35 வயதான வில்லியம்சன், லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 0 மற்றும் 18 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது.   இந்நிலையில், ஓவல் மற்றும் ட்ரெண்ட் பிரிட்ஜ் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ள அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என அவர் முடிவு செய்துள்ளார். கடந்த 2024 ஜூன் மாதம் முதல் அவர் நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலப்பகுதியில் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச தொடர்களில் மட்டுமே அவர் விளையாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.   கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து சகலதுறை வீரர் அவிஷ்கவின் அதிரடி சதத்துடன் இலங்கை A அணிக்கு இலகு...

இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக 2 சதங்களை விளாசிய அஞ்சல பண்டார

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட...

மும்முனை தொடருக்கான இலங்கை A குழாத்தில் சிராஸ், வியாஸ்காந்த், மாதுளன்

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் A அணிகள் பங்குபற்றும் உத்தியோகப்பற்றற்ற மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும்...

2026 LPL தொடருக்கு நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட 20 நட்சத்திரங்கள்

கொழும்பு, இலங்கை (மே 29, 2026): இலங்கையின் மிகப்பிரமாண்ட டி20 கிரிக்கெட் திருவிழாவான 'லங்கா பிறீமியர் லீக் 2026'...

2026இல் இலங்கை, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் மே.தீவுகள் அணி

2026ஆம் ஆண்டு கிரிக்கெட் பருவக்காலத்தில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் ஆடவர்...

தம்புள்ள சிக்சர்ஸ் அணியின் உரிமையாளராக ‘டி சில்வா ஹோல்டிங்ஸ்’ தொடர்ந்து நீடிப்பு

லங்கா பிறீமியர் லீக் ஆறாவது அத்தியாயம் ஆரம்பமாவதற்கு முன்னதாக, தம்புள்ள சிக்சர்ஸ் ((Dambulla Sixers) அணியானது ப்ரியங்க டி...

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

லங்கா பிறீமியர் லீக்கில் களமிறங்கும் முன்னணி அணிகளில் ஒன்றான கண்டி அணி, இம்முறை போட்டித் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த...

Latest articles

End of an Era: Thank You, Cristiano Ronaldo

Twenty-three years. Six FIFA World Cups. Countless unforgettable moments. An international career that began on...

WATCH –  Media Takes the Field! | Friendly 6-A-Side Cricket Match | Lemonade Sixes 2026

Media hits the field in style! A thrilling Friendly 6-A-Side Cricket Clash bringing energy,...

Highlights | Isipathana College vs S. Thomas’ College | Rizwi Suhayb Trophy 2026

Rizwi Suhayb Trophy glory for Isipathana! Relive the standout moments as Isipathana College produced...

மஹவிதானவின் அதிரடிச் சதத்தால் இந்திய இளையோரை வீழ்த்தியது இலங்கை

இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் இன்று (06) நடைபெற்ற இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில், இலங்கை...