சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் மூன்றாவது இறுதியுமான போட்டியில், இலங்கை மகளிர் அணியானது டக்வத் லூயிஸ் முறையில் 03 ஓட்டங்களால் பதிவு செய்துள்ளது.
T20I தொடரினையும் கைப்பற்றிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்களாதேஷையும் 3-0 என வைட்வொஷ் செய்துள்ளது.
பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரினை ஏற்கனவே இலங்கை வீராங்கனைகள் 2-0 எனக் கைப்பற்றியிருக்க, மூன்றாவது போட்டி இன்று (02) சில்லேட் அரங்கில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் மகளிர் அணியினர் முதலில் இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்தனர். மழையின் காரணமாக அணிக்கு 09 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணியானது 6 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை மகளிர் துடுப்பாட்டம் சார்பில் அணித்தலைவி சமரி அத்தபத்து 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
பங்களாதேஷ் மகளிர் அணியின் பந்துவீச்சில் சுல்டானா காட்டுன் 08 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 88 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணியானது 9 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களுடன் போட்டியில் போராடித் தோல்வியினைத் தழுவியது.
பங்களாதேஷ் துடுப்பாட்டம் சார்பில் ஷோபனா மொஸ்தரி 21 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்றதோடு இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் சுகந்திகா குமாரி மற்றும் சமரி அத்தபத்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகியாகவும், தொடர் நாயகியாகவும் இலங்கை மகளிர் அணிக்காக சகலதுறைகளில் பிரகாசித்திருந்த சாமரி அத்தபத்து தெரிவாகியிருந்தார்.
ஸ்கோர் விபரம்
$contents = file_get_contents("https://stats.thepapare.com/cricket/embed/match_result/sri-lanka-vs-bangladesh-bangladesh-tour-of-sri-lanka-3rd-t20"); echo $contents;
>>மேலும் கிரிக்கெட்...
இலங்கையின் வளர்ந்து வரும் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க பத்திரகேயின் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 10 மில்லியன் ரூபா (ஒரு கோடி) நிதியுதவியை வழங்கியுள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவிக்கான உத்தியோகபூர்வ காசோலை நேற்று (28) மாலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் வைத்து ருமேஷ் தரங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்களை வீழ்த்தி இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்
கிரிக்கெட் விளையாட்டிற்கு அப்பால், நாட்டின் ஏனைய விளையாட்டுத் துறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கோடும், சர்வதேச மட்டத்தில் பதக்கங்களை வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட வீரர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும் இலங்கை கிரிக்கெட்; நிறுவனத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கென்யாவின் நைரோபியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 2026 'கிப் கெய்னோ கிளாசிக்' மெய்வல்லுநர் தொடரில் முதல் தடவையாக பங்குகொண்ட ருமேஷ் தரங்க புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தாhர்.
உலக மெய்வல்லுநர் சம்மேளனத்தின் 'கோல்ட் லெவல்' அந்தஸ்து கொண்ட போட்டியொன்றில் பங்குபற்றி பதக்கம் வென்ற முதல் வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார். அதேபோல, கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 89.37 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையும் அவர் படைத்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<