இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் விபரங்கள் வெளியீடு

351

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 16 ஆட்சேபனைகளில், ஓரேயொரு ஆட்சேபனை மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஏனைய அனைத்து ஆட்சேபனைகளையும் புறக்கணிப்பதற்கு தேர்தல் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் தலைவர் பதவிக்கு ஜயந்த தர்மதாச, மொஹான் டி சில்வா, கே. மதிவானன் மற்றும் சம்மி சில்வா உள்ளிட்ட நால்வர் போட்டியிடவுள்ளதாக தேர்தல் செயற்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி

புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் …

அத்துடன், உப செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கிஹான் வீரசிங்க, குறித்த பதவிக்கான தகைமைகளைக் கொண்டிருக்காத காரணத்தால் அதை புறக்கணிப்பதற்கு தேர்தல் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதிபெற்றவர்கள் தொடர்பிலான அறிவிப்பு நேற்றைய தினம் (14) விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து டபிள்யூ.டி. சந்திர ஜயதிலக தலைமையிலான தேர்தல் செயற்குழுவினால் அறிவிக்கப்பட்டது.

இம்முறை தேர்தலில் 7 முக்கிய பதவிகளுக்காக 26 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் ஆறு பேரின் வேட்பு மனுக்களுக்கு எதிராக ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதில் உப தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 1996 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க மற்றும் அதே உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக விளையாடிய பிரமோத்ய விக்ரமசிங்க, கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஜயந்த தர்மதாச, ரிஸ்மன் நாரங்கொட, நளீன் விக்ரமசிங்க, சன்ஜய சேதர செனரத் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன.

எனினும், குறித்த வேட்பு மனுக்களுக்கு எதிராக விசாரணைகளின் போது எந்தவொரு எதிர்ப்புகளும் முன்வைக்கப்படவில்லை. இதனால் குறித்த 6 பேருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க தேர்தல் குழு தீர்மானித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ஜயந்த தர்மதாச, மொஹான் டி சில்வா, கே. மதிவானன் மற்றும் சம்மி சில்வா உள்ளிட்ட நால்வரது வேட்பு மனுக்களையும் தேர்தல் செயற்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இமாலய ஓட்ட எண்ணிக்கையை பெற்ற அயர்லாந்து A அணி

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி, ஆகியவைக்கு…

இதில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால, அரசியல் ரீதியான காரணங்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியிருந்ததுடன், அவரது தரப்பில் முன்னாள் உப தலைவர்களுள் ஒருவரான மொஹான் டி சில்வா மற்றும் முன்னாள் பொருளாளரான சம்மி சில்வா ஆகியோர் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர். எனினும், தலைவர் பதவிக்கு கடைசி நேரத்தில் சுமதிபால தரப்பில் இருந்து ஒருவர் மாத்திரம் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம், ரணதுங்க தரப்பில் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஜயந்த தர்மதாச மற்றும் முன்னாள் உப தலைவரான கே. மதிவாணன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளனர். இவர்களில் ஒருவர் இறுதி நேரத்தில் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளவார்கள் என நம்பப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, இம்முறை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டியிடவுள்ளனர். ரணதுங்க தரப்பில் இருந்து முன்னாள் செயலாளரான நிஷாந்த ரணதுங்கவும், திலங்க சுமதிபால தரப்பிலிருந்து பந்துல திசாநாயக்க, சம்மி சில்வா மற்றும் மொஹான் டி சில்வா ஆகியோர் இப்பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.

இதில் உப செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கிஹான் வீரசிங்க, குறித்த பதவிக்கான தகைமைகளைக் கொண்டிருக்காத காரணத்தால் அதை புறக்கணிப்பதற்கு தேர்தல் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, பொருளாளர் பதவிக்கு ரணதுங்க தரப்பிலிருந்து ரிஸ்மன் நாரங்கொடவும், நளீன் விக்ரமசிஙகவும் போட்டியிடவுள்ளதுடன், சுமதிபால தரப்பிலிருந்து லசந்த விக்ரமசிங்க, ரவீன் விக்ரமரத்ன மற்றும் சம்மி சில்வா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2018 முதல் 2021 வரையான 4 வருட காலப்பகுதிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் வேட்பு மனுக்கள் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தென்னாபிரிக்காவின் வெற்றியால் இலங்கைக்கு தரவரிசையில் முன்னேற்றம்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0…

இதனிடையே, வேட்பு மனுக்கள் தொடர்பிலான ஆட்சேபனைகள் கடந்த 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஜனவரி முதலாம், 2ஆம் திகதிகளில் ஆட்சேபனை குறித்த விசாரணைகள் இடம்பெற்றது. அதன் பின்னர் தேர்தலில் போட்டியிட தகுதிபெற்றவர்கள் தொடர்பிலான அறிவிப்பு நேற்று (14) வெளியிடப்பட்டது.

இதன்படி, தேர்தலில் போட்டியிட தகுதியுடைய நபர்களது பெயர், விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்படும்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிப்பின்படி, எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி காலை 10.30 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் தேர்தல் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்கள் விபரம்

  • தலைவர் பதவி (ஒரு பதவி) – மொஹான் டி சில்வா, ஜயந்த தர்மதாச, கே. மதிவாணன், சம்மி சில்வா
  • உப தலைவர் பதவி (2 பதவி) – சம்மி சில்வா, ரவீன் விக்ரமசிங்க, கே. மதிவாணன், அர்ஜுன ரணதுங்க, பிரமோத்ய விக்ரமசிங்க, மொஹான் டி சில்வா
  • செயலாளர் பதவி (ஒரு பதவி) – பந்துல திசாநாயக்க, நிஷாந்த ரணதுங்க, சம்மி சில்வா, மொஹான் டி சில்வா
  • உப செயலாளர் பதவி (ஒரு பதவி) – கிரிஷாந்த கபுவத்த, பந்துல திசாநாயக்க, ரவீன் விக்ரமரத்ன, ஹிரந்த பெரேரா
  • பொருளாளர் பதவி (ஒரு பதவி) – லசந்த விக்ரமசிங்க, ரவீன் விக்ரமரத்ன, ரிஸ்மன் நாரங்கொட, நளீன் விக்ரமசிங்க, சம்மி சில்வா
  • உப பொருளாளர் பதவி (ஒரு பதவி) – லலித் ரம்புக்வெல்ல, நளீன் விக்ரமசிங்க, சன்ஜய சேதர செனரத்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<