நிறைவுக்கு வந்திருக்கும் 119ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியினை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
அபிஜோய்சாந்த் மிரட்டல் சதம்; வெற்றிக்காக போராடும் யாழ். மத்தி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (06) நிறைவுக்கு வரும் போது, போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 248 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யாழ். மத்தி அணியானது 36 ஓவர்களில் 120 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்பட்டிருந்தது. யாழ். மத்தி அணிக்கு களத்தில் இருந்து நம்பிக்கை வழங்கிய முரளி திசோன் 22 ஓட்டங்களுடனும், அய்யாத்துறை கபிஷேக் ஓட்டங்களின்றியும் காணப்பட்டிருந்தனர்.
இன்று (07) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் போட்டியின் வெற்றிக்காக 128 ஓட்டங்கள் தேவைப்பட்ட யாழ். மத்தி அணி சார்பில் முரளி திசோன் நிதானம் கலந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் T20I அணியின் தலைவர் பதவியில் இருந்து ரஷித்...
Highlights of the 20th Limited Overs Encounter between D.S. Senanayake College and Mahanama College held at the SSC Grounds.
https://youtu.be/SFE_CEonZ40