சைனீஸ் தாய்ப்பேயில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட இலங்கை வீரர்கள் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியிருந்தனர்.
இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட டில்ஹானி லேக்கம்கே 56.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு இராணி (56.82 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், சைனீஸ் தாய்ப்பே வீராங்கனை...