மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் ”பறக்கத் டெக்ஸ் மின்னொளி உதைப்பந்தாட்ட சமர்-2017” சுற்றுப் போட்டி கடந்த 10 ஆம் திகதி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.