இலங்கையின் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது.
இதுதொடர்பான விசேட வர்த்தமானி வினைளயாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம், இலங்கை ஜுடோ (Judo) சங்கம், இலங்கை ஸ்கிரப்பல் (Scrabble) சம்மேளனம், இலங்கை சர்பிங் (Surfing) சம்மேளனம் மற்றும் இலங்கை ஜுஜிட்சு (Jiu-jitsu) சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, மேற்குறிப்பிட்ட ஐந்து விளையட்டு சம்மேளனங்களுக்கு ஜூலை முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய உரிய அதிகாரம் பொருந்தியவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<