குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மெண்டிஸ்!

Indian Premier League 2025

104
Mendis-GT

இலங்கை அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் IPL தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளார்.

>>அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு மீண்டும் பயிற்சியாளராகும் புபுது தசநாயக்க<<

இந்த தொடரானது எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜோஸ் பட்லரால் IPL பிளே-ஓஃப் போட்டிகளில் விளையாட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக குசல் மெண்டிஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குசல் மெண்டிஸ் IPL அணியொன்றால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் இறுதியாக பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் PSL தொடரில் குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடியதுடன், 168 என்ற ஓட்ட வேகத்தில் 143 ஓட்டங்களை விளாசி சிறந்த ஓட்டக்குவிப்புடன் உள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியை பொருத்தவரை அனுஜ் ராவட் மற்றும் குமார் குஷாக்ரா போன்ற இரண்டு விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர்கள் ஏற்கனவே குழாத்தில் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<