ஆசிய கால்பந்தாட்ட தலைமை அதிகாரியாக அநுர டி சில்வா

115

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தின் போது சார்ஜாவில் நடைபெறும் போட்டிகளுக்கான தலைமை அதிகாரியாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள 17ஆவது ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் கடந்த 5ஆம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது. 24 ஆசிய நாடுகள் பங்குபற்றியுள்ள இம்முறை போட்டிகள் தொடர்ந்து 4 வாரங்களுக்கு நடைபெறவுள்ளன. இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

மெஸ்ஸியை முந்திய இந்திய வீரர் சுனில் செத்ரி

தற்போது கால்பந்து ஆடிவரும் வீரர்களில் அதிக சர்வதேச கோல்கள் பெற்ற வீரர்கள் …

பிஃபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு நடைபெறுகின்ற உலகின் இரண்டாவதும், பழைமையும் வாய்ந்த கால்பந்தாட்டப் போட்டிகளில் ஒன்றாக ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் விளங்குகின்றது.

இத்தொடரில் ஜப்பான் அணி நான்கு தடவைகள் (1992, 2000, 2004 மற்றும் 2001) சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இம்முறை பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.

இதன்படி, இம்முறை ஆசிய கிண்ணப் போட்டிகளின் லீக் ஆட்டங்கள் டுபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட 6 நகரங்களில் நடைபெறவுள்ளன. இதில் 6 போட்டிகள் சார்ஜாவில் நடைபெறவுள்ளதுடன், இதன் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை அதிகாரியாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா செயற்படவுள்ளார்.

முன்னதாக கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற, சிரியா மற்றும் பலஸ்தீன அணிகளுக்கிடையிலான போட்டியில் அவர் தலைமை அதிகாரியாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரான அநுர டி சில்வா, 2008 முதல் இலங்கை கால்பந்தாட்ட நிர்வாகத்தில் இணைந்துகொண்டு பல பொறுப்புகளில் கடமையாற்றியுள்ளார்.

கொழும்பு மற்றும் ரினௌன் கழகங்கள் மீது பக்கீர் அலி அதிருப்தி

இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட தேசிய கால்பந்து அணித் தேர்வு முகாமில் பங்கேற்க …

தற்போது இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அவர், ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அபிவிருத்தி குழு உறுப்பினராகவும், தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில், இம்முறை ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் தலைமை அதிகாரியாக செயற்பட கிடைத்தமை தொடர்பில் அவர் கருந்து வெளியிடுகையில், ”இம்முறை போட்டிகளில் தலைமை அதிகாரியாக செயற்பட கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இது இலங்கைக்கும், எனக்கும் பெருமைக்குரிய விடயமாகும். மிக விரைவில் இலங்கை அணியை ஆசிய கிண்ணத்தில் பங்குபெறச் செய்வதே எனது நோக்கமாகும். இதற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன். எனக்கு இந்தப் பதவி கிடைத்தை பொறுக்க முடியாத ஒருசிலர், அதை தவறான முறையில் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<