மேல் மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழா நாளை ஆரம்பம்

157

இவ்வருடத்திற்கான மேல் மாகாண பாடசாலைகள் விளையாட்டு நிகழ்வுகள் இம்மாதம் 19ஆம் திகதி (நாளை திங்கட்கிழமை) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாளை (19ஆம் திகதி) ஆரம்பமாகும் இந்நிகழ்வுகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெறும். இதில், ஏற்கனவே இடம்பெற்று முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகிய பாடசாலை வீர வீராங்கனைகள் பங்கு கொள்ளவுள்ளனர்.

இலங்கைக்காக கிர்கிஸ்தானில் தங்கம் வென்ற அஷ்ரப் மற்றும் ஹாசினி

போட்டி நிகழ்வுகளின் முடிவில், எதிர்வரும் 22ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு இறுதி நிகழ்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அனைத்து மாகாணங்களிலும், மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று நிறைவடைந்ததன் பின்னர் தேசிய மட்ட பாடசாலைகள் விளையாட்டு விழா இடம்பெறும்.

இறுதியாக கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மேல் மாகாணம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது