3-0 என்ற ரீதியில் தொடரை வென்றது இங்கிலாந்து

259
SLvsENG 5th ODI

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

நான்கு போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று 5ஆவதும் இறுதியான ஒருநாள்  போட்டி கார்டிப் சொபியா மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில் இந்த இறுதி ஒருநாள் போட்டியிளாவது இலங்கை அணி ஆறுதல் வெற்றியை பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்போடு விளையாடியது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பாட அழைப்பு விடுத்தது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து 324/7 (50)
ஜோ ரூட் 93
ஜொஸ் பட்லர் 70
ஜேம்ஸ் வின்ஸ் 51
ஜேசன் ரோய் 34
தனுஷ்க்க குணதிலக்க 48/3

இலங்கை 202/10 (42.4)
தினேஷ் சந்திமால் 53
தனுஷ்க்க குணதிலக்க 48
குசல் மெண்டிஸ் 22
தசுன் ஷானக 22
டேவிட் வில்லே 34/4
லியம் ப்ளங்கட் 44/3

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 122 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை பெற்றதோடு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக

ஜொஸ் பட்லர் தெரிவு செய்யப்பட்டதோடு  போட்டித் தொடரின் நாயகனாக ஜேசன் ரோய் தெரிவு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒரு டி20 போட்டி எதிர்வரும் செவ்வாய்க் கிழமை இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.  

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்