ஆடுகளத்தின் ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்ட முதல் T20

64
ICC Twitter

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் குவஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த முதல் T20 போட்டி ஆடுகளத்தின் ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்டது.

வருடத்தின் முதல் வெற்றியை சுவைக்கப்போவது இலங்கையா? இந்தியாவா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட…

இன்றைய போட்டியின் நாணய சுழற்சி இடம்பெற்றதுடன், அதில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. எனினும், நாணய சுழற்சியின் பின்னர் மழை குறுக்கிட, ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர், மழை ஓய்ந்த போதும், ஆடுகளத்தில் சில பகுதிகளில் மழைநீர் புகுந்ததில், மைதான ஊழியர்கள் ஆடுகளத்தின் ஈரமான பகுதியை உலர்த்துவதற்கு முற்பட்டனர். தொடர்ச்சியாக சுமார் 2 மணித்தியாலம் போராடியும், போட்டிக்காக ஆடுகளத்தை தயார்படுத்த முடியவில்லை.

குறிப்பாக ஆடுகளத்தை உலர்த்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அது பலனளிக்கவில்லை. எனவே,  நடுவர்கள் இரவு 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர்.

இதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 போட்டி ஆடுகளத்தின் ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்டது. 

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது T20 போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<