கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் சிலி ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ஆர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது.

45ஆவது கோபா அமெரிக்கக் கிண்ணக் கால்பந்துப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மட்டக் கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆரம்பம், எதிர்பார்த்த அணிகள் வெற்றி

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. “லீக்முடிவில் 4 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள்நொக்அவுட்” சுற்றுக்குத் தகுதி பெறும்.‘டிபிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினாசிலி ஆகிய அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் அந்த அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. 2ஆவது பாதி ஆட்டத்தில் அந்த அணி வீரர்களின் ஆதிக்கம் தொடர்ந்து குறிப்பாக டிமாரியா சிறப்பாக விளையாடினார். ஆட்டத்தின் 49ஆவது நிமிடத்திலும், 58ஆவது நிமிடத்திலும் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார்.

இறுதியில் சிலி அணி கடுமையாகப் போராடியது. ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லாமல் போனது. இறுதியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பொலிவியாபனாமா ஆகிய அணிகள் மோதின. இதில் பொலிவியா எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பனாமா 2-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது. பனாமா அணியில் பெரஸ் 2 கோலும் (11 மற்றும் 87ஆவது நிமிடம்), பொலிவியா அணியில் கார்லோஸ் ஆர்சேயும் (54ஆவது நிமிடம்) கோல் அடித்தனர்.

நாளை நடைபெறும் ஆட்டத்தில்பிரிவில் உள்ள கொலம்பியாபராகுவே அணிகளும் அமெரிக்காகொஸ்டாரிகா அணிகளும் மோதுகின்றன.

கொலம்பியா தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி இருந்தது. இதனால் பராகுவேயை வீழ்த்தி 2ஆவது வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் உள்ளது. பராகுவே தொடக்க ஆட்டத்தில் கொஸ்டாரி காவுடன் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிவு செய்தது.அமெரிக்கா, கொஸ்டரிகா அணிகள் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்