ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராக மஹேல  

87
GETTY IMAGES

இங்கிலாந்து கிரிக்கெட் சபை 2020ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அணிக்கு 100 பந்துகள் கொண்ட வித்தியாசமான கிரிக்கெட் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தவுள்ளது. 

சுவிஸ் தேசிய அணியில் யாழ் மத்திய கல்லூரி மாணவராக பெருமை கொள்ளும் திலீபன்

கிரிக்கெட் விளையாட்டில் திறமையும் ஆர்வமும் இருந்தால்….

இங்கிலாந்து கிரிக்கெட் சபை 2017ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட இந்த கிரிக்கெட் தொடர் த ஹன்ரட் (The Hundred) எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. ஆடவர், மகளிர் என இரு பாலாருக்குமாக நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் பிராந்தியங்களைச் சேர்ந்த எட்டு அணிகள் பங்குபற்றவுள்ளன.  

அந்தவகையில் இந்த கிரிக்கெட் தொடரில் சௌத்தம்ப்டன் நகரினை பிரதிநிதித்துவம் செய்து ஆடவுள்ள ஆடவர் (Men) கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

இதேநேரம் சௌத்தம்ப்டன் நகரினை பிரதிநிதித்துவம் செய்து த ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் ஆடும் மகளிர் அணியின் பயிற்சியாளராக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சரோலட் எட்வார்ட்ஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.  

சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுத்த பின்னர் 2015ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு துடுப்பாட்ட நிபுணராக சில காலம் கடயைமாற்றிய மஹேல ஜயவர்தன, அதன் மூலம் கிரிக்கெட் பயிற்சியாளராக தனது வாழ்க்கையினை தொடர ஆரம்பித்தார்.  

பின்னர் 2017ஆம் ஆண்டு, இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) T20 கிரிக்கெட் தொடரில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டிருந்தார். மஹேல ஜயவர்தனவின் ஆளுகையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு தடவைகள் இந்தியன் ப்ரீமியர் லீக் சம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.   

இலங்கை பாகிஸ்தான் செல்வது உறுதி : போட்டி அட்டவணை வெளியானது!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மாத இறுதியில்….

அதேவேளை பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரில் ஆடும் குல்னா டைடன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் மஹேல ஜயவர்தன இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு நியமனம் பெற்றார். 

இவ்வாறாக பல கிரிக்கெட் அணிகளை பயிற்றுவித்த அனுபவத்தின் மூலமே, மஹேல ஜயவர்தன த ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் பங்குபெறவிருக்கும் அணியொன்றுக்கு பயிற்றுவிப்பாளராக மாறும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றார்.  

இந்த கிரிக்கெட் தொடரில் அணியொன்றின் பயிற்றுவிப்பாளராக மாறியது தொடர்பில்  கருத்துக்களை வெளியிட்டிருந்த மஹேல ஜயவர்தன, இந்த கிரிக்கெட் தொடரை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்திருந்ததோடு பயிற்சியாளராக மாறியது கௌரவமான விடயம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.  

இந்த ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும் என முன்னர் கூறப்பட்ட போதும் இந்த ஆண்டு அதில் சில மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது. அந்தவகையில் இந்த கிரிக்கெட் தொடரில் 10 பந்துகள் கொண்ட 10 ஓவர்கள் வீசப்படவுள்ளதோடு, குறிப்பிட்ட ஒவ்வொரு ஓவரினதும் 10 பந்துகளையோ அல்லது 5 பந்துகளையோ பந்துவீச்சாளர் ஒருவருக்கு வீச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, இந்த கிரிக்கெட் தொடரில் இன்னும் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க