ஓய்வை அறிவித்த மாலிங்கவின் அதிரடி கருத்து

5000

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளமை தொடர்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தன்னை கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்ற முயற்சித்தவர்களுக்கு அனுதாபத்தையும் தெரிவிப்பதாக பேஸ்புக் காணொளியொன்றை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணியின் அனுபவமிக்க வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க பதிவிட்டுள்ள இந்த காணொளியில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி கூறியதுடன், தனது ஓய்வு குறித்த உத்தியோகபூர்வமான அறிவித்தலை மேற்கொண்டார்.

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் மாலிங்க

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித்….

“பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரிக்கெட் சபையிடம் அறிவித்திருந்தேன். இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த விடயத்தை உறுதிப்படுத்திக்கொண்டேன்.

நான் ஓய்வுபெறுகிறேன் என்பதை ஏற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை, என்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப முதல் போட்டியில் மாத்திரம் விளையாட சம்மதம் தெரிவித்தது” என்றார்.

அதேநேரம், அவருடைய 16 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்த இவர், எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் போட்டிக்கு அனைவரையும் அழைத்துள்ளார்.

“இலங்கை கிரிக்கெட் அணிக்காக 16 வருடங்கள் விளையாடி, வெற்றிபெறுவதற்கான சவால்களை எதிர்கொண்டு பங்களிப்பு வழங்கவும், பலரிடம் எதிர்த்து நின்று எனது திறமையினை வெளிப்படுத்தி அணியில் நிலைத்து நிற்கவும் உங்களுடைய (ரசிகர்களின்) சக்தி எனக்கு கிடைத்தமையை இட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன், எனது பின்னால், எனக்கு ஆதரவு வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அதேநேரம், எதிர்வரும் 26 ஆம் திகதி கெத்தாராம (ஆர்.பிரேமதாஸ) மைதானத்தில் நான் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளேன். முடிந்தால் மைதானத்துக்கு வருகைத்தந்து என்னுடைய இறுதி ஒருநாள் போட்டியை பார்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இதன் பின்னர் நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை பார்வையிட முடியாது”

நான் செய்தது தவறு, ஆனால் வருத்தப்படமாட்டேன் – குமார் தர்மசேன

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில்….

அதுமாத்திரமின்றி தன்னை அணியில் இருந்து நீக்க முயற்சித்த அல்லது அணியிலிருந்து வெளியேற்ற முயற்சித்தவர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவிப்பதாக மாலிங்க குறித்த காணொளியில் சுட்டிக்காட்டினார்.

“இதேவேளை, இத்தனை காலமாக என்னை அணியிலிருந்து வெளியேற்ற, ஒன்றிணைந்தோ அல்லது தனியாகவோ முயற்சித்த அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன். ஏனென்றால், நான் எனது திறமையின் காரணமாக மாத்திரமே அணியில் இருந்தேன். கிரிக்கெட் வீரர் என்ற ரீதியில் நான் சிறப்பாக செயற்பட்டுள்ளேன் என நினைக்கிறேன். அதேநேரம், 26 ஆம் திகதி அனைவரும் மைதானத்துக்கு வருகைதருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்” எனவும் மாலிங்க குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க