எதிர்வரும் 9ஆம், 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கும் 111ஆவது வடக்கின் பெரும் சமரில் தமது இந்த பருவகால போட்டிகளில் பெற்றுள்ள பெறும் அனுபவங்களுடன் கிண்ணத்தை வெல்லும் நோக்குடன் களமிறங்கவுள்ளது யாழ். மத்திய கல்லூரி அணி.

வடக்கின் பெரும் சமரில் 36ஆவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றுமா சென் ஜோன்ஸ்?

யாழ். மத்திய கல்லூரி அணி, இம்முறை 5ஆவது வருட வீரனாக வடக்கின் பெரும் போரில் களமிறங்கும் நேர்த்தியான முன்வரிசைத் துடுப்பாட்ட வீரரான பிரியலக்சன் தலைமையில் களமிறங்குகின்றது.

[rev_slider dfcc728]

அண்மைய பதிவுகள்

இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத் தொடரில் பிரிவு-3இல் விளையாடி வரும் யாழ். மத்திய கல்லூரி அணியினர் மிகவும் சிறப்பாகப் பிரகாசித்து வருகின்றனர். அவர்கள் இதுவரை எந்தவிதமான தோல்விகளையும் சந்திக்காத அணியாகவே தொடரில் பயணித்து வருகின்றனர்.

அணியின் பெறுதிகளை பார்க்கும்பொழுது, இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள இவ்வணி, 8 போட்டிகளில் வெற்றியைப் பொற்றுள்ளது. 2 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்துள்ளது.

குறிப்பாக இபாகமுவ மத்திய கல்லூரி, அக்குறனை ஸாஹிரா கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் பத்திரிசியார் கல்லூரி ஆகிய அணிகளுக்கெதிரான போட்டிகளில் மத்திய கல்லூரி அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய வீரர்கள்

யாழ். மத்திய கல்லூரி அணிக் குழாமை நோக்குகையில் அனுபவ வீரர்கள் மற்றும் சிறப்புப் பெறுதிகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் புதுமுக வீரர்கள் என்ற உள்ளடக்கத்துடன் பலம்பொருந்திய குழாமைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.

வடமாகாண அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் தசோபன், நேர்த்தியான துடுப்பாட்டக்காரர்களான ஜெரோசன், கோமேதகன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதுசன் ஆகியோர் எதிரணிக்கு சவால் விடும் வகையில் உள்ள அணியின் முக்கிய புள்ளிகளாவர்.

துடுப்பாட்டத்தில் பிரியலக்சன், கார்த்தீபன், ஜெரோசன் கோமேதகன் ஆகியோர் முன்வரிசை மற்றும் மத்திய வரிசையைப் பலப்படுத்துகின்ற அதேவேளை, தசோபன் மற்றும் கௌதமன் ஆகியோரும் அணிக்கு கைகொடுக்கக் கூடிய மேலதிக துடுப்பாட்ட வீரர்களாக உள்ளனர்.

கிரிக்கெட்டில் வடக்கு இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக வர வேண்டும் : எட்வார்ட் எடின்

பந்து வீச்சை நோக்குகையில் மதுசன், சஜிகன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இணைந்து தசோபன், தர்சாந் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் எதிரணியைத் திகிலூட்டுவதில்  வல்லவர்களாக உள்ளனர்.

அணியின் பயிற்றுவிப்பாளர்

கடந்த 12 வருடங்களாக அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் சுரேஷ் மோஹன் அவர்களே, இம்முறையும் பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றார். இம்முறை அணியில் களமிறங்கும் வீரர்கள் பலர் கல்லூரியின் பழைய மாணவரான மோஹனின் பயிற்றுவிப்பின் கீழ், 13 வயதுப் பிரிவிலிருந்தே பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இதனால் வீரர்கள் ஒவ்வொருவர் பற்றியும் அவர் கொண்டிருக்கும் தெளிவு  அணிக்கு மேலும் கைகொடுக்கும்.

இறுதியாக

கடந்த வருடம் வடக்கின் பெரும் போரில் களங்கண்ட அணியிலிருந்த வெறுமனே இரண்டு வீரர்கள் மட்டுமே இவ்வருட அணியிலிருந்து வெளியேறியிருப்பதால், மத்திய கல்லூரி அணி அனுப வரீதியாகப் பலமானதாகவுள்ளது.

அதேவேளை, அதிகளவான வீரர்கள் சகலதுறை வீரர்களாக இருக்கின்றமை அணிக்கு பெரும்பலமாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சிறந்த கிரிக்கெட் வீரனாவதற்கு பயிற்சியும் நல்லொழுக்கமுமே முக்கியம் : சண்முகலிங்கம்

இது தவிர, இதுவரை தாம் எந்தத் தோல்வியையும் சந்திக்கவில்லை என்பது மத்திய கல்லூரி வீரர்களுக்கு மனவலிமையைக் கொடுத்து போட்டியின் போது சிறந்த உத்வேகம் அழிக்கும் என்பது மத்தியினருக்கு மேலும் சாதகமாய் அமையும்.

இவர்களுடைய ஒரே நோக்கமாக அமைவது  28ஆவது முறையாக வடக்கின் பெரும் சமரில் வெற்றிபெற்று சென் ஜோன்ஸ் கல்லூரியிடமிருந்து கிண்ணத்தை மீட்டெடுப்பதாகும்.

இலங்கையின் முதற்தர விளையாட்டு இனையதளமான ThePapare.com ஊடாக போட்டியின் நேரடி ஒளிபரப்பை மூன்று தினங்களிலும் கண்டுகளிக்கலாம் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம்.  

கால்பந்து செய்திகளுக்கு