ஊடகவியலாளரின் ஒலிவாங்கியை குளத்தில் வீசிய ரொனால்டோ

190
Cristiano Ronaldo

கால்பந்து வீரர் ரொனால்டோவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அவருடைய மைக்கைப் பிடுங்கி அருகில் இருந்த குளத்துக்குள் வீசிய சம்பவம் சமூக வலைத்தளங்கில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில் தனியார் தொலைகாட்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் ரொனால்டோவிடம் ஹங்கேரியுடனான போட்டிக்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது கோபத்தில் இருந்த ரொனால்டோ, ஊடகவியலாளரிடம் இருந்த மைக்கைப் பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்