சங்கா, மஹேல உள்ளிட்ட வீரர்களின் நிராகரிப்பு வரவேற்கத்தக்கது – அர்ஜுன ரணதுங்க

751

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையில் ஆலோசகர்களாக இணைந்து கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் தமக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தனர்.  

குறித்த முடிவானது வரவேற்கத்தக்க விடயம் எனவும், அதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையை சங்கா, அரவிந்த நிராகரிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக இணையுமாறு …

பெற்றோலிய வளத்துறை அபவிருத்தி அமைச்சில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில்,

”சூதாட்டகாரர்கள் மற்றும் வியாபாரிகளின் கைகளில் அகப்படாமல் புத்திசாலித்தனமாக செயற்பட்ட சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்.

மேலும், சூதாட்டக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் தமது தேவைகளை பூர்த்தி செய்யவே வீரர்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இடம்பெறாமல் இருக்கவும் கிரிக்கெட் விளையாட்டை பாதுகாக்கவும் சரியான வழிமுறையை பயன்படுத்த வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்” எனவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதன்போது தெரிவித்தார்.   

தன்மீது சாட்டப்ட்டுள்ள பந்து சேதப்படுத்தல் குற்றச்சாட்டினை மறுக்கும் தினேஷ் சந்திமால்

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் …

இன்று கிரிக்கெட் நிர்வாக சபையில் உள்ள வியாபாரிகள் எமது சிரேஷ்ட வீரர்களின் பெயரைப் பயன்படுத்தி நிரந்தரமாக பதவியில் இருப்பதற்கு முயற்சிக்கின்றனர். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் இவ்வாறு குழுவொன்றை நியமித்தார். ஆனால் ஒன்றுமே இடம்பெறவில்லை.

தற்போது அதே பாணியில் சிரேஷ்ட வீரர்களின் பெயர்களை முன்நிலைப்படுத்தி அவர்களின் பெயர்களை விற்க முயற்சிக்கின்றனர். இதை நான் கடுமையான கண்டிக்கின்றேன். இங்கு என்ன செய்யப் போகிறார்கள்? இது காலத்தை வீணடிக்கும் செயலாகும். ஆனால் குறித்த சிரேஷ்ட வீரர்கள் கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தமை தொடர்பாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  

என்னைப் பொறுத்தவரை வீரர்களை யாரும் எதற்கும் பயன்படுத்தக்கூடாது. வீரர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கிரிக்கெட்டை கீழ் நிலைக்கு கொண்டு சென்றவர்களை கிரிக்கெட் நிர்வாக்கத்துக்குள் வரவிடாமல் தடுக்கவேண்டும். அதற்கான காலமும் வந்துவிட்டது.

மழையினால் நழுவிப்போன இலங்கையின் வெற்றி வாய்ப்பு

சென். லூசியா நகரில் நடைபெற்று வந்த சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய …

கடந்த காலத்தில் கிரிக்கெட்டில் பல தோல்விகளை நாம் சந்தித்தோம். இதில் எமது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் நல்ல பாடமொன்றை கற்றுக்கொள்ளாவிட்டால் சூதாட்டக்காரர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கிரிக்கெட்டை தாரை வார்த்து நாசம் செய்த அரசாங்கம் என்ற பெயர் உருவாகும்.

அதிலும் குறிப்பாக எதிர்வரும் 2 வருடங்களில் கிரிக்கெட் அழிந்துவிடும் நிலையும் உருவாகும். அமைச்சராக உள்ள எனக்கும் இதில் பொறுப்பு இருக்கின்றது. நான் கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக எல்லாவற்றையும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தெரிவித்துவிட்டேன். இன்று நான் கவலையுடனே இதனையும் தெரிவிக்கின்றேன்.

ஆனால், இன்று கிரிக்கெட் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆனால், தற்போது இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப ஒரு அணியே என்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…