ரசிகர்களிடம் முதன்முறையாக வெறுப்பை சம்பாதித்த ஏபி டி வில்லியர்ஸ்

1083

தென்னாபிரிக்க அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் ரசிகர்களால் மதிக்கப்படும் ஒருவருமான ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்டுள்ள இன்ஸ்ராகிராம் பதிவால், இந்திய ரசிகர்களிடமிருந்து அவர் முதன்முறையாக வெறுப்பை சந்தித்துள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையும் ஏபி டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற…

தற்போதைய கிரிக்கெட் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஏபி டி வில்லியர்ஸ் இவ்வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இந்த செய்தியானது சர்வதேச கிரிக்கெட்டில் வெளிவந்த மிக பரபரப்பானதும், எதிர்பார்க்காததுமான செய்தியாக வலம் வந்தது. இவரின் ஓய்வால் தென்னாபிரிக்க ரசிகர்கள் மாத்திரமின்றி, உலக ரசிகர்களும் தங்களது கவலையை வெளியிட்டனர்.

தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், அவர் ஓய்வில் இருக்க வேண்டும், அதுமாத்திரமின்றி குடும்பத்துடன் நேரத்தை செலவளிக்க வேண்டும் என்பதை உணர்ந்த ரசிகர்கள், அவரின் எதிர்கால வாழ்க்கை சந்தோசமாக அமைய வேண்டும் என வாழ்த்துகளையும் கூறத் தவறவில்லை.

வில்லியர்ஸின் ஓய்வு தொடர்பில் தென்னாபிரிக்காவில் பேசப்பட்டதையும் விட, இந்தியாவில் அதிகமாக பேசப்பட்டதை நாம் காணக்கூடியதாக இருந்தது. காரணம் தென்னாபிரிக்காவை அடுத்து, வில்லியர்ஸிற்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் இந்தியாவில்தான் இருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வரும் வில்லியர்ஸ், ஓய்வு பெற்றிருந்தாலும் ரசிகர்களுக்காக ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை கடந்த மாதம் உறுதிசெய்திருந்தார்.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்த வில்லியர்ஸ், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடன் இணைந்து விளையாடுவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும், பெங்களூர் போட்டி என்றால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லையென்றால் அது மிகையாகாது.

காலி கிரிக்கெட் மைதானத்தின் எதிர்காலம் கேள்விக்குறி

இலங்கை கிரிக்கெட் அணியின் ராசியான மைதானமாகவும்…

இப்படி இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், ஏபி டி வில்லியர்ஸ் இன்ஸ்ராகிராமில் புதிதாக வெளியிட்டுள்ள “வைன்” (மதுபானம்) நிறுவனமொன்றின்  விளம்பரத்தை பார்த்து கடுமையாக அவரை சாடிவருகின்றனர். முச்சக்கர வண்டியின் மேல் வைன் போத்தல் இருப்பதை போன்ற புகைப்படத்தில், இந்திய தேசிய கொடியையும் இணைத்து, டெல்லியில் தற்போது விற்பனைக்கு என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த பதிவினை பார்வையிட்ட இந்திய ரசிகர்கள், மதுபான விளம்பரத்துக்கு, இந்திய தேசிய கொடியை எப்படி பயன்படுத்த முடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

அதுமாத்திரமின்றி, அடுத்த சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய முன்னணி வீரர் இவ்வாறான விளம்பரங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் ஒரு நாட்டின் தேசியக் கொடியை பயன்படுத்துவது மிகப்பெரிய தவறு. இந்த பதிவில் இருந்து இந்திய தேசிய கொடியை நீக்க வேண்டும். இவ்வாறான பதிவொன்றினை வில்லியர்ஸிடம் இருந்து நாம் எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் தங்களது கருத்துகளை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<