முதிர்ச்சி அடையும் டெஸ்ட் போட்டியொன்று

4729

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான டெல்லி டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் காலையில் அஞ்செலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழந்தபோது, பகல் போசணத்துடன் அனைத்தும் முடிந்துவிடும் என்று ஊடக அறையில் முனுமுனுப்பு ஒலி கேட்டது.   

இலங்கை அணி போட்டியிடுவதற்கு தைரியம் இல்லாமல் டெல்லி காற்று மாசுபடுவதை கையில் எடுத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் பக்கம் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தனன்ஞயவின் சதத்தோடு டெல்லி டெஸ்டை சமப்படுத்திய இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி…

 

போதிய பலம்பொருந்திய அணியாக இந்தியாவை அடைந்த இலங்கை பலமிழந்த அணியாக நாடு திரும்பப்போகிறது என்று நம்பிக்கை இழந்திருந்த நேரமது. ஆனால், அதற்குப் பின்னர் இலங்கை அபார போராட்டத்தை வெளிக்காட்டியது. ஐந்தாம் நாள் முழுவதிலும் இலங்கை அணி வெறும் இரண்டு விக்கெட்டுகளையே இழந்தது. உண்மையில் அது ஒரு தேர்ந்த ஆட்டமாக இருந்தது. ஐந்தாவது நாள் ஆடுகளத்தில் எப்படி துடுப்பெடுத்தாட வேண்டும் என்ற சிறந்த உதாரணமாகவும் இருந்தது.

போட்டியின் ஒன்றரை நாட்கள் இருக்க விராட் கோஹ்லி இலங்கைக்கு 410 என்ற ஓட்ட இலக்கை நிர்ணயித்தபோது விருந்தாளிகள் எப்படி இந்த காலத்தில் துடுப்பெடுத்தாடப் போகிறார்கள் என்ற கேள்வி மாத்திரமே எழுந்தது. இலங்கை அணி இந்த சவாலை வெல்ல வேண்டுமானால் மூன்று முன்னணி துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ் அல்லது தினேஷ் சந்திமால் ஆகியோரில் ஒருவரேனும் இன்னிங்ஸ் முழுவதும் ஆட வேண்டும் என்று கருதப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராக கருணாரத்னவின் மோசமான ஆட்டம் தொடர்ந்தது. அவர் இலகுவாக தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இறுதி நாள் காலையின் ஐந்தாவது ஓவரில் கசப்பு மாத்திரை ஒன்றை விழுங்குவது போல் மெதிவ்ஸின் விக்கெட் பறிபோனது.

இந்த சரிவுக்கு இடையே தனன்ஞய டி சில்வா தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார். நாம் ஒரு கச்சிதமான மூன்றாம் வரிசை வீரரை கண்டுபிடித்து விட்டோமா? என்று மாத்திரமே அப்போது கூறிக்கொண்டோம். அந்த இடத்தில் நிலைபெற குசல் மெண்டிஸ் எதிர்பார்த்தபோதும் எதிரணியினர் அவரை முன்கூட்டியே வெளியேற்றிவிட்டனர். மெண்டிஸ் மீண்டும் அணிக்கு திரும்ப தற்போது கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

மெண்டிஸ் தலைமையில் இளையோர் உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நியுஸிலாந்தில் இடம்பெறவுள்ள ICCயின் 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான …

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தனது கன்னி தொடரில் சதம் பெற்ற பின் தனன்ஞய மற்றொரு தொடரான ஜிம்பாப்வேயுக்கு எதிராகவும் அதிக ஓட்டங்கள் பெற்று சதம் குவித்தார். அப்போது அவர் ஆறாவது வரிசையில் துடுப்பெடுத்தாடினார். என்றாலும் இலங்கை அணி தென்னாபிரிக்கா சென்றபோது அவருக்கு நான்காவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. இப்படியான ஒரு பரிசோதனை முயற்சிக்கு தென்னாபிரிக்கா பொருத்தமான இடமாக இருக்கவில்லை. அங்கு சோபிக்கத் தவறிய அவர் இறுதியில் தரமிறக்கப்பட்டு ‘A’ அணிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகளில் இலங்கை A அணியை வழிநடாத்திய அவர் தொடரில் ஒரு சதம், இரு அரைச் சதங்களோடு வெற்றியுடன் திரும்பினார். இதன்மூலம் இலங்கை அணியில் தனது இடத்தை உறுதி செய்துகொண்டார். மேற்கிந்திய சுற்றுப்பயண முடிவின்போது, இந்த 26 வயது வீரரின் தன்னலமற்ற அணுகுமுறை பற்றி அணி முகாமையாளர் சரித் சேனநாயக்க பெருமிதத்தொடு குறிப்பிட்டிருந்தார்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ரவிச்சந்தரன் அஷ்வினுக்கு எதிராக தனது பொறுமையை வெளிக்காட்ட முடியாமல் தடுமாறிய லஹிரு திரிமான்னவை டெல்லியில் நடக்கும் கடைசி டெஸ்டில் நீக்குவதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்தார்கள். அணியின் உப தலைவரை இவ்வாறு அடிக்கடி நீக்கும் வழக்கம் இல்லாத நிலையில் இது ஒரு தீர்க்கமான முடிவாக இருந்தது. என்றாலும் இந்த தைரியமான முடிவின் மூலம் அணிக்கு வந்த தனன்ஞய தனக்கு கிடைத்த வாய்ப்பை பற்றிப்பிடித்துக் கொண்டார்.

ஆட்டமிழக்காமல் அவர் பெற்ற 119 ஒட்டங்களும் வருகை தந்த துடுப்பாட்ட வீரர் ஒருவர் இந்தியாவில் நான்காவது இன்னிங்ஸில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக உள்ளது. தனன்ஞய விவ் ரிச்சட்ஸை தாண்டியே இந்த சாதனையை படைத்தார். ரிச்சட்ஸ் ஆட்டமிழக்காது பெற்ற 109 ஓட்டங்கள் கூட டெல்லியில் பெறப்பட்டதாகும். இது இந்திய அணியின் கோட்டையில் அந்த அணி 30 ஆண்டுகளுக்கு முன் கடைசியாக தோல்வியை சந்திக்க காரணமானது.

ThePapare Tamil weekly sports roundup – Episode 05

Uploaded by ThePapare.com on 2017-12-05.

டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஒருவர் சதம் பெற்ற நான்காவது சந்தர்ப்பமாக இது இருந்தது. கடைசியாக பத்து ஆண்டுகளுக்கு முன் ஹோபார்டில் குமார் சங்கக்கார நான்காவது இன்னிங்ஸில் 192 ஓட்டங்களைப் பெற்றார்.

தனன்ஞயவுடன் ரொஷேன் சில்வாவும் ‘A’ அணி சுற்றுப் பயணத்தில் இணைந்திருந்தார். முதல்தர கட்டமைப்புக் கொண்டதும் குறைந்த போட்டித்தன்மை உடையதுமான ‘A’ அணி தொடர் அதிக சவால் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரர்களை தயார்படுத்துவதற்கு தீர்வாக உள்ளது.

ரொஷேன், இந்தியாவுடனான முதல் இன்னிங்ஸில் பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்தபோது அவர் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்தார். தமது திறமையை வளர்த்து இந்த இடத்திற்கு வர அவர் நீண்ட காலம் காத்திருந்தார். ரொஷேன் அளவுக்கு டெஸ்ட் அணிக்கு தகுதி பெறுவதற்கு பொருத்தமான வேறு ஒருவர் இல்லை. அவர் தனது கன்னி டெஸ்டில் ஆடுவதற்கு முன் 100க்கும் அதிகமான முதல்தரப் போட்டிகளில் ஆடி 6,000க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றிருக்கிறார்.

முதல் இன்னிங்ஸில் அவரை ஆட்டமிழக்கச் செய்த அஷ்வின், கடைசி நாளில் இலங்கை போட்டியை காப்பாற்ற போராடிய நிலையில் அவர் துடுப்பெடுத்தாட களமிறங்கியபோது எதேச்சையாக அதே அஷ்வினே பந்து வீசிக்கொண்டிருந்தார். காலை வேளையில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் துடுப்பெடுத்தாடி விக்கெட்டுகளை காத்துக்கொண்டிருந்தார்.

அந்த நிலையான ஆட்டத்தையே ரொஷேன் தொடரவேண்டி இருந்தபோதும் அவரது அனுபவமின்மை பெரிய நம்பிக்கை தரவில்லை. ஆனால் அவர் அந்த சந்தர்ப்பத்தில் சிறப்பாக செயற்பட்டார்.

டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் அதிரடி மாற்றங்கள்

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை அடுத்து ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டிருக்கும் டெஸ்ட் துடுப்பாட்ட…

அஷ்வினின் மூன்று பந்துகளை பதற்றத்துடன் முகம்கொடுத்த ரொஷேன் இந்திய சுழற்பந்து வீச்சாளர் லெக் திசையில் பந்தை வீசியபோது அதனை தட்டிவிட அது லெப்–கலி (leg-side) திசையில் இருக்கும் செடேஷ்வர் புஜாராவை கடந்து பௌண்டரிக்கு சென்றது. அது தொடக்கம் அவரது மன உறுதி வலுப்பெற்று நேர்த்தியாக பந்தை அடித்தாட ஆரம்பித்தார்.

உண்மையில் ரொஷேன் ஓப் திசையில் பந்தை அடிப்பதில் வலுவான வீரராவார். ஒப் திசை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அவர் அதிரடி பௌண்டரிகளை விளாசினார். ஒரு தடவை ஜடேஜா தூக்கிப் போட்ட பந்தை முன்னால் வந்து எக்ஸ்ட்ரா கவர் (extra cover) திசையில் விளாசி தனது கன்னி அரைச் சதத்தை பெற்றார். அதேபோன்று ஓன் திசையிலும் சிறப்பாக ஆடிய அவர் வேகமாக தனது கால்களை நகர்த்தி முன்னால் வந்து லாவகமாக டிரைவ் செய்து பௌண்டரி விளாசினார். தனன்ஞயவைப் போலவே அவரது ஆட்டத்தை பார்க்க பெரும் விருந்தாக இருந்தது.

தனன்ஞய மற்றும் ரொஷேன் சரியான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடிய நிலையில், நிரோஷன் திக்வல்ல இந்திய அணியை வீழ்த்தும் ஓர் ஆட்டத்தை ஆட முயன்றார். ரொஷேனுடன் அவர் ஆடுகளத்தில் இருந்தபோது தனது சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் அந்தஸ்தில் இருந்து விலகி எதிர்முனை வீரருக்கு சதம் பெற இடம்விட்டார். பின்னர் 117 ஓட்ட இலக்கை எட்ட 50 நிமிடங்கள் எஞ்சி இருப்பதாக கூறப்பட்டபோது திக்வல்ல அதனை விரட்ட முயன்றார். அதனை கைவிட ரொஷேன் புத்திசாலித்தனமான யோசனை கூறினார்.

திக்வல்ல போன்ற வீரர்கள் எமக்கு தேவைப்படுகின்றனர். அவரது குரும்புத்தனங்களை உலகக் கிரிக்கெட் தொடர்ந்து பார்க்கத்தான் போகிறது. இதன்மூலம் இலங்கை கிரிக்கெட் அற்புதமான காலத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

  மேலும் பல சுவையான கிரிக்கெட் செய்திகளைப் படிக்க

 

கிரிக்கெட்

பாடசாலைகளுக்கு இடையில், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இடம்பெறும் அனைத்து ….